Saturday, May 25, 2013


என்ன இது? எதற்கு இந்த பீடிகை என்று ஒரு சிலர் கேட்கலாம்.

நகரமயமாக்கல்,  சாலைவிரிவாக்கம்,  வளர்ச்சி,  வாகனங்கள் பெருக்கம்
யாவும் நம் முன்னேற்றத்தின் குறியீடாக கருதப்படும் நிலையில்,  வாகன வசதியற்றவர் அல்லது நடைமறந்து போகாமல் உடல் நலம் கருதி, அன்றாட வாழ்க்கை நிரலில் நடைபோட வேண்டுமெனில், அது அவ்வளவு எளிதான செயல் அன்று.


இரு சக்கர வாகனங்கள்,  நான்கு சக்கர வாகனங்கள்,  கனரக வாகனங்கள் என எண்ணிறந்த வகை பயணப்பட, அதன் ஓட்டிகள் அவற்றை செலுத்திட தடையேதும் இல்லாத பாதை வசதிகள், பாத சாரிகளுக்கு உண்டா?

பாதசாரிகள், வாகனங்கள் செல்லும் பாதைகள் ஊடே அச்சத்துடன் பயணிக்க வேண்டியுள்ளது.போக்குவரத்து சமிக்ஞை ஏற்பாடு உள்ள இடங்களில் "வரிக்குதிரை கடத்தம்", போன்ற பகுதிகளில் கூட, கடுமையான நெரிசல், பய உணர்வுடன், வித்தை கூட்டம்போல் கடக்க வேண்டியுள்ளது.


நடைபாதையினருக்கு உடற்பயிற்சி சார்ந்த இடங்கள்,  கடற்கரை,  பூங்கா போன்றவகைள் மட்டுமே புகலிடம் அளிக்கின்றன. வளர்ச்சி, ,நடைபாதையினரை மறந்து,  பாதசாரிகளை புறக்கணித்து வருகிறது  எனில் அது மிகையன்று!

Monday, May 6, 2013


கோலோச்சிட விழையும்
குடிசையில்

தம் பிடி இறுக்கி
விசையுடன் செலுத்திடும்

சுர நிரல்

மல்லாட்டில் வீழ்ந்திடும்
உடல்கள்

மலேரியாவின் நாடிகள்
உயர்ந்திடும்

'கொசுவின் நிரல்'

 குறித்த

 இக் கவிதை ஆங்கிலத்தில்.

 படைப்பாளி நைசீரியா நாட்டின் கவிஞர். உச்சேசுக்குவா (Uchechukwu)

(மொழியாக்கம்)

உடல் மீதான வன்மம்
எங்கேயும் எப்போதும்

நொடிகளில் நேரிடும்
மனங்களின் பிறழ்ச்சி
நோயின் சாட்சி

மனதின் வன்மம் 
வதை தேடி
வரம்பு மீறி
விளைக்கும் செயல் கோடி

Wednesday, May 1, 2013


குறுவையும் போச்சு
சம்பாவும் போச்சு

கடைமடையும் காய்ந்து
போச்சு

கவலையும் துயரமும்
கை மீறி போச்சு

உழவும் தொழிலும்
உட்கார்ந்து போச்சு

வட்டியும் முதலும்
கூடிப் போச்சு

காப்பீடும் இழப்பீடும்
கானல் நீராச்சு