Sunday, January 25, 2015

காசுமீர துயரம் !

காசு கொடுத்து வாங்கிய துயரம்,
இயற்கைக்கு இடைஞ்சல் ஏற்றி,
ஆற்றின் போக்கை மாற்றி,
சாலை அமைத்து
வேலை முடித்தது,
வெளிப்படுகிறது
வெள்ளமாக...

மிதக்கிறது வாழ்க்கை,
மிதிபடுகிறது உடல்கள்
ஓடும் வெள்ளத்துடன்,
பிரிந்த உயிர்கள்
முறிந்த மரங்கள்,

கவிழ்ந்த இல்லங்கள்
கலைந்த மேகங்கள்,
வாழ்க்கை சேமிப்பும்
கை நழுவி போக,

வெந்த புண்ணும்
நொந்து போக,
நடை இழந்த பிணமாக,

நா வறண்டு
ஒளி அடங்கி,
உடல் சுருங்கி

நிர்வாணமே
நிவாரணமாக,

ஆதாரம் யாவும் சேதாரமாகி,
சோதரர் யாவரும்
சோகமயமாகி,

சொல்லிடாத்துயர்
சொந்தமாகி,
நிர்க்கதியாய்
நீளும்
அவர் உலகம்
வெளிச்சத்தை தேடி

(காசுமீர இழப்புகள் செய்தி கேட்டவுடன் எழுத்தில் வடித்தது, இன்று இடுகை செய்தது)

No comments: