Wednesday, February 18, 2015

உலக தாய்மொழி நாள்

ஒவ்வொரு ஆண்டும் 21,பிப்ரவரி தாய்மொழி நாள் ஆகும்.கிழக்கு

பாக்கிசுத்தான் நாட்டில் வங்க மொழி பேசுபவரின் தாய்மொழி உரிமை

மறுக்கப்பட்டதின் காரணமாக, வங்க மொழி உரிமை, சமத்துவ உரிமை

 முன்னெடுக்கப்பட்டு, ஐக்கிய நாடுகள் மன்றத்திற்கு சென்று,  உலக

தாய்மொழி நாள் அறிவிப்புக்கு காரணமாக அமைந்தது.


வங்க மொழி பேசுபவர், வங்காளிகள் தங்கள் பண்பாட்டு கூறுகளில் ஒன்றான

மொழி நலம்பேணுவதில்,காப்பதில் உரிமை உறுதிப்பாட்டில் இந்தியத்

 திருநாட்டின் பிறமொழி-பண்பாட்டு மக்களுக்கு வெளிச்சம் பாய்ச்சுபவர்களாக

விளங்குகின்றனர்.


இந்தியத் துணைக்  கண்டத்திலும், உலகப் பண்பாட்டு வரலாற்றிலும்,

செம்மொழி, தொன்மை மிக்க தமிழ்மொழி, தமிழினம் படும்பாடு, பறிபோய்க்

கொண்டிருக்கும் உரிமைகள் ஏராளம். சிதைந்து, சிதலமடைந்து

கொண்டிருக்கும் வாழ்வுரிமைகளில் , சிந்திக்க ஒரு மொழி,செயற்பட

ஒருமொழி,பிழைக்க ஒரு மொழி, தழைக்க ஒருமொழி என

அடையாளம் நாள்தோறும் தொலைந்து, அடிப்படை இழந்து, ஆர்ப்பரிக்கும்

அரங்க பதுமையாக தமிழர்கள்!


அறிவியல் ஏது? தொழில் நுட்பம் ஏது? என வினாக்கள் எழுப்பிடும் வினோத

கூட்டம்.காரணம் யாதென கவனமுடன் பரிசீலிக்கும் கண்ணியம் இழந்திடும்

 தமிழ் மக்கள்.


நிலம் உம் வசம் இல்லை! வளம் உம் வசம் இல்லை! பயம் உம் வசம் உண்டு!

பாசாங்கு உம் வசம் உண்டு! பள்ளிகளிலும்கூட பளிச்சென்ற ஆங்கிலம்,

 பிற மொழி பயின்றிட பரபரப்பு உண்டு! பேசத் தெரிந்தால் மட்டும்

போதும்.தமிழ் சோறு போடுமா? என்று விடைக்கும் மனப்பான்மை

பரவலாக.ஆட்சிக் கட்டிலில் அமர்வோரும் இதற்கு விதி

விலக்கல்ல.


வியாக்யானம் விசாலமாக,அளந்திடும் திறமை,மொழிப் புலமை

தனி மனிதனே தமிழ் மொழியின் உருவகமாக, பிம்பமாக போற்றிடும் சுவறி,

போக்கிலி மனம், பேதை குணம், பெருகி விளங்கிடும் கட்சி அரசியல்!

கும்மாளம், சிம்மாசனம்,சினேகம், சீர்திருத்தம் யாவும் சில்லரைக்காக!


இன்னும் எத்தனை பத்தாண்டுகள் சென்றாலும் மொழி நாள் நமது வழி நாளாக,

 விடியல் நாளாக சகல நிலைகளிலும், தமிழ் அரியணை ஏறும் நடைமுறை

தினமே மெய்யான தாய்மொழி நாளாகும் தமிழனுக்கு!


 அதுவரை பல தளங்களிலும் தமிழ் மக்கள் உரிமை, சனநாயக உரிமை

எடுத்துச் செல்லப்பட்டு, உரிமை மீட்பு இயக்கம் நமது வாழ்வின் செயல்முறை

இலட்சியம் ஆக வேன்டும்1

No comments: