ஆவுடையார் மரம்
அன்னாந்து பார்க்க
வைக்கும்,
அப்படியும் இப்படியும்
செல்லும் காலம்,
ஓரமாக இருந்தாலும்
ஈர்க்கும் மண(ன)ம்.
சிந்தும் பூக்கள்
சேகரிக்கும்
மக்கள்,
தேனீக்கள்
கெஞ்சும்
சிவ தலங்களின்
சீரிய விருட்சம்
காய்ந்தது ஏனோ
என பதறிய
உள்ளம்
கதறிய எம்மிடம்
சூழல் வினைஞர்
பகிர்ந்த துயரம்
"சாராயக் கடை உரிமையாளன்
மனையில் இருந்த
சங்கடம்
சடுதியில் அமிலம்
வேரில்
விட்டழித்த
வீணன்
கட்டிடம் காப்பாற்ற
சாய்த்தனன்"
அன்னாந்து பார்க்க
வைக்கும்,
அப்படியும் இப்படியும்
செல்லும் காலம்,
ஓரமாக இருந்தாலும்
ஈர்க்கும் மண(ன)ம்.
சிந்தும் பூக்கள்
சேகரிக்கும்
மக்கள்,
தேனீக்கள்
கெஞ்சும்
சிவ தலங்களின்
சீரிய விருட்சம்
காய்ந்தது ஏனோ
என பதறிய
உள்ளம்
கதறிய எம்மிடம்
சூழல் வினைஞர்
பகிர்ந்த துயரம்
"சாராயக் கடை உரிமையாளன்
மனையில் இருந்த
சங்கடம்
சடுதியில் அமிலம்
வேரில்
விட்டழித்த
வீணன்
கட்டிடம் காப்பாற்ற
சாய்த்தனன்"
No comments:
Post a Comment