உயிர் தந்தாய்!
உடல் தந்தாய்!
உணர்வளித்தாய்!
உணவளித்தாய்!
உள்ளொளி வெளிச்சம்
பாய்ச்சி,
தன்னொளி குன்றினாய்!
தளர்வுற்ற போதிலும்
தாளாண்மை கூட்டினாய்!
வேளாண்மை குறைந்திடும்
வேளையில்,
சூழல் மேலாண்மை
மெருகூட்டி,
மேன்மை காட்டினாய்!
(இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் அய்யா நினைவாக)
No comments:
Post a Comment