Monday, March 30, 2015

ஒவ்வாமை

தேடினேன் பல காலம்,
ஓடினேன் வெகுதூரம்,

கண்டவை யாவும்
சலிப்பாக,

காண்பவை யாவும் புதிராக,

உண்டவை செரித்திடாது
ஒதுங்கினேன்
ஓசையின்றி,

ஒவ்வாமை யாதென
உணர்ந்தேன்.


முதலீடு

முதலீடு வேண்டும்,
இலச்சினை பொருளில்.

இரவல் முதலீடு
வசப்பட வேண்டும்.

வணிகம் செழிக்கும்
வளம் கொழிக்கும்,

தரம் இறங்கும்
தகுதி உயரும்.

இடைத்தரகு ஒழியும்,
வேளாண்மை
மேலாண்மையுறும்.

வேதனை தீரும்!
சாதனை சேரும்!

வேலை வாய்ப்பு
 சாலை சேர்ப்பு,

சிகினா தாளிலிட்டு
வெண்டைக் காயும்,
சுண்டைக் காயும்,

வீச்சு வீச்சாக
சூட்டுடன் சூப்பும்,
கட்டமைப்பு களம் அமைப்பு,

வெட்ட வெளியும் விண்வெளியாகும்.

சில்லரை மீன்கள் யாவும்
 சில்லிட்டு,
சீசாவில் இட்டு..........

Saturday, March 28, 2015

உயிர் ஆயுதம்



ஆயுதமே உயிர்
ஆன போராட்டத்தில்
அழிவு சகிக்காது,

காகிதம் செல்லாத
காசான காலத்தில்,


உயிர் ஆயுதம் களைந்தாய்!

நிராயுதபாணி உடலாய்,
நீள் புகழ் சேர்த்தாய்!

(முத்துக்குமார் நினைவாக அப்போது எழுதியது)

Friday, March 27, 2015

நல்லாட்சி

இப்படியும் அப்படியும்
போகத்தான் வேணும்!

இங்கேயும் அங்கேயும்
வேகத்தான் வேணும்!

எங்கேயும் எப்போதும்
ஏங்கத்தான் வேணும்!

நாமெல்லாம் நாளெல்லாம்
யோசிக்கத்தான் வேணும்!

நம்ம ஊர் நம்ம ஆட்சி
ரொம்ப மாறத்தான் வேணும்!

நமதாட்சி நல்லாட்சி
தோன்றத்தான் வேணும்!
ஆர்த்திடும் வாகனங்கள் போட்டியில், அமைதியாக சிலருடன் நானும்

சாலையில் சந்தடிகளுக்கிடையில்,வந்தடி பதித்து வாகனத்தில் முன்னும்,

பின்னும் முந்தினேன்.


முச்சந்தியில் நிற்க வைத்திருந்த சிலை பக்கவாட்டில், சாலையின் ஓரத்தில்

சருகென சாய்க்கப்பட்ட மரம், உயிர் இழந்த சரீரம் போல் கிடத்தி வைக்கப் பட்டிருந்தது.

 கிருமி நாசினி, மங்கல வாசம் நீ! ஆலயந்தோறும் அலங்காரம் நீ! திரு வீட்டின்

திருப்பம் நீ! திருவிழாவின் திலகம் நீ!

உம்மை வீழ்த்தி, கீழே சாய்த்து,ஓரத்தில் கிடத்தி உம்மைப்  போன்றோர்

உயர்வுக்காக, வாழ்விற்காக, உயரத்தில் பதாகை எழுப்பி விழா கோலம்

பூணுவார், சடங்கு நாளில் சம்பிரதாய பவனியில், ஆண்டு தோறும்.
நித்திரை பிடி
கனவு போல்,
சித்திரை பிடி
வேனிற் போல்,

முழக்கங்களின் பிடியில்

இயக்கங்கள்:

"மரம் வளர்ப்போம்
"மழை பெறுவோம்"
சிட்டுக் குருவி தினம்!

செத்து அழியுது  இனம்!

ஓங்கி உயரும் கம்பம்!

மச்சி வீட்டின்
உச்சியில்,

தகவல் பரிமாற்ற சேவை
தடையில்லாமல்!

ஒலி அலை உல்லாசம்
ஓயாத வியாபாரம் ,

ஒடுங்கிடும் துலாபாரம்!

விடுதலை வெளிச்சமான
சிட்டு வாழ்க்கை ,
சுதந்திர தேசத்தில்
நிரந்தரம் இல்லை!

தொலைந்த வாழ்க்கையின்
தொல்லியல் சின்னமாக !

விடுதலைக் கவியின் விருப்பம்
விடியாத பொழுதாக !

இன்னொரு இருள் சேர்த்திடும்
இன்ப பூமியாக !

நாள் கொண்டாடும் நலங்கிள்ளிகளாக!

இன்னொரு தினத்திற்கு
இனிப்பு வழங்க,

 இளி முகத்தோடு
 ஊடக ஒப்பனைக்கு
 தயாராவோம்!








வீடற்றோர் வீதியில்!
நாடற்றோர் இல்லை!
நாடு உண்டு!
வீடில்லை!


Wednesday, March 18, 2015

செல்லப் பிராணிகள் வளர்ப்பது பெரும்பாலும் குடும்பத்தலைவர்கள் விருப்பத்தில் அமைவது இல்லை.வீட்டில் பிள்ளைகள் இளம் பருவத்தில் விளையாட்டு விருப்பமாக பிறரைப் பார்த்து உருவாக்கிக் கொள்ளும் பழக்கமாகும்.

மீன் தொட்டி வாங்கி,மீன் குஞ்சுகள் வளர்ப்பது,குருவிகள்,கிளிகள் வாங்கி கூண்டில் அடைத்து வளர்ப்பது போன்ற பழக்கங்களும் இதில் அமைவது உண்டு.

தொடக்கத்தில் ஏற்படும் ஆர்வம் படிப்படியாக குறைந்து,வீட்டில் அம்மா பார்த்துக் கொள்வார்,அப்பா கவனித்துக் கொள்வார் என்கின்ற எண்ணம் மோலோங்கி வருகிறது.

இருக்கும் பணியுடன் குடும்ப பொறுப்புகளுடன் இதுவும் சேர்த்து விடப்படும்.நாயாக இருப்பின் இயற்கை உபாதைக்கு அழைத்துச் செல்வது, தினசரி உலாவிற்கு காலாற அழைத்துச் செல்வது, தினசரி குளிப்பாட்டுவது, உணவு உரிய நேரத்தில் அளிப்பது,மருத்துவரிடம் இட்டுச் செல்வது ஆகிய வேலைகளும் அவசியமாகின்றன.

இவையாவும் ஒரு குடும்பத் தலைவன் அல்லது தலைவி மேற்கொள்ள வேண்டிய அவசியப் பணிகளாக நெருக்குகின்றன.கூட்டுக் குடும்பம் உள்ள நிலையில் இது போன்ற சூழல் மிகவும் கடுமையாக அமைகின்றன.

குடும்ப நிர்வாகத்தில் பல பிரச்சனைகளை உண்டாக்கும் நெருக்கடியாகவும் விளங்குகின்றது.ஆரம்ப ஆர்வம் குறையாமல் தொடர்ந்து செல்லப் பிராணியை பராமரிக்கும் வேலையை சில மணி நேரம் மட்டும் அன்றாடம் குடும்பத்தில் உள்ள பிள்ளைகள் மேற்கொண்டால் மிகவும் நல்லது.

படிக்கிறோம், கல்லூரிக்குச் செல்கிறோம், நேரம் இல்லை என்று தவிர்த்திடும் பழக்கம் இன்று பரவலாக உள்ளது.

குடும்ப வேலைகளுடன் இதுவும் ஒரு கூடுதல் சுமையாக இருப்பினும், அதை ஏற்று சமாளித்திடும் தாய், தந்தை மற்றும் குடும்ப பெரியவர்களின் நிலைமையை அனுசரித்து வேலைப் பகிர்வினை மேற்கொண்டால்,

வளர் இளம் பருவத்தினர்,இளைஞர்கள் வாழ்வில் பல திறப்பட்ட அனுபவங்கள், படிப்பினை பெறுவதற்கு, அதன் வாயிலாக தம் தகுதியை உயர்த்திக் கொள்ளும் அரிய நடைமுறை வாய்ப்பு கிடைக்கும்.


வாங்குவது எளிது!
வளர்ப்பது அரிது!

வாங்குவது ஆர்வம்!
பேணுவது சிரமம்!

கொஞ்சுவது சுலபம்!




 கோடிப்பது துயரம்!!

Friday, March 13, 2015

ஓசைகளின் ஒலியில் ஆசை,
கடு கடு
குடு குடு

உள்ளொலியில் ஒசை
ஓங்கி ஒலித்திட

வெடு வெடு சிடு சிடு

வாங்கிய எண்ணம் ஏங்கி இருந்திட
தட தட பட பட
கட கட மட மட

தூங்கிய பொழுது துலங்கி நின்றிட
சட சட சுட சுட
மட மட விட விட

கலங்கிய காலம் கரைந்து சென்றிட
கடமுட கடமுட
கசமுச கசமுச

விரையும்  வாழ்க்கை கோலம்

நச நச வச வச
வச வச பச பச

என்ன ஆச்சு?
எவரிடமும் பேச்சு!
"தள்ளிப் போச்சு"
தந்திரம்
துள்ளிப் போச்சு!
பகடம்
துளுத்துப் போச்சு!

Tuesday, March 10, 2015

எங்க ஊர் சுற்றுலா?
அசிங்கம் செய்யக்
கூடாது!

கடற்கரை!
ஆட்டம் போடவே!

ஆதி நாயகனே!
கடற்கரை
மேலாண்மைத் திட்டத்தில்
எட்டி வைத்திட

நீ எப்படி?

இப்பக்கம்
எட்டிப் பார்ப்பாய்?
வேகத்தடை

தடைகள் உடைபடும்
வீதிகளில்!
மேடும் சமமாகும்
மேதகு சவாரியில்!
மூன்றாம்
எழுச்சி ,
எமக்கு?
எண்ண ஓட்டம்!
என்னையும்!
உன்னையும்!
தாண்டி!

காலங்களை
வெல்லும்!

கலங்கரைத்
தேவையில்லை!
எல்லைக் கோடு
சுட்ட!
இருக்கும் போது
இருந்த மரியாதை!

இறக்கும் போது
இழந்த அவமானம்!

இல்லாத போது
பொல்லாதவனையும்
போற்றும்
மனம்

உமக்கு மட்டும்
விதி விலக்கு!

ஊராருக்கு நீ
வீதி விளக்கு!

சேதி அப்படி!
சீருடை தரி!

நேர் வழி மறி!

நம்பும்படியாக!

அழைக்கவில்லை என்றில்லை!
உருப்படியாய் நீ
உழைக்கவில்லை!

உமக்குத் தவிர நீ
தமுக்கு தட்டியதில்லை!

அமுக்கி வைப்பாய்!
அரவமின்றி!
ஆக்கத்தை!

ஊக்கம் உடமை!
உயர்வு!

உழைப்பே!
எமக்கு சிறப்பு!
என்பாய்!

எவரும் நம்பும்படியாக!

மண்ணை புரிந்து கொள்ளவில்லை!
தன்னை அறிந்து கொள்ளவில்லை!

திண்ணை ஒழிந்தும் அதன்
திசைவழி மாறவில்லை!

ஏறு மாறாய் வாழும்!
ஏற்றமில்லாத் தமிழன்!

தோற்றத்தை தாங்கி!
தொய் தமிழன்!

கூவித் திரியும் காவி!
கூன் முதுகு நிமிரா பாவி!

கூட்டு வாழ்க்கை தொலைத்த
நாட்டணி நலம் இழந்த,

பூட்டணி என்றதும்
கூட்டணி வாழ்க்கை!

சுருண்ட சுதேசி



போபால் யூனியன் கார்பைடு
மித்தேல் ஐசோ சயனைடு
15000 இந்தியர் மரிப்பு

ஊடகக் கணக்கே
சரி என்றாலும்
உளவுத்துறை புகாரே
உண்மை என்றாலும்

26 ஆண்டுகள் இழுத்தடி
வழக்கு
நீதி மன்றம் அளித்த
தீர்ப்பு

8 பேருக்கு மேல் எட்டாத
இரண்டு வருட சிறை
உடனடி பிணையல்

பிணக் குவியல்
பணக் குவியல்
முன் தோற்றது

பாதிப்பின் விளைவில்
பகல் எது
இரா எது
என்று தெரியா
ஒளி இழந்த மாந்தர்
சந்ததிகளை இழந்த தாய்கள்

ஊனமுற்று
உடைந்து போன உள்ளங்கள்
உலகை விட்டு பிரிந்த
உயிர்கள்

யாவும் சொந்த நாட்டிலேயே
அன்னியரை விரட்டி அடித்த
அகிம்சை உடை தரித்த
பூமியிலே
சுருண்ட சுதேசி
உள்ளூர் வாசி

எங்காவது இப்படி உண்டா
ஏங்கிய இந்தியன்
தூங்கியவாறே
துடிப்பவர் யார்
நடிப்பவர் தேசத்தில்
அடிப்பவர் ஆட்சியில்

சட்டம்
தம் கடமை செய்யும்
உடமை உள்ளவர்
வீட்டு சேவகம்
நாட்டு சேவகம்

தொழிற்சாலை வேண்டும்
தொழிலாளர் எதற்கு
மண் வேண்டும்
மக்கள் எதற்கு

தொகை குறைந்தால் என்ன
GDP அதிகரிக்கும்
மூலதனம் குவியும்
மூளை இழந்தால்
என்ன
நாளை பார்க்கலாம்

Monday, March 9, 2015

இடிந்த கரை மக்கள்
அங்கே!

இமைகள் சுரந்து
இதயம் கனத்து,

பெய்யும் மழை
ஆதரவாக,
பேரிரைச்சலுடன் குளமாக்கி,

மக்கள்!
போராட்ட சூடு வாங்கி,
சூறைக் காற்றும் பலமாக,

நாள்கள் கடந்து
மாதங்களாக,

உயிர்வாழும்
உரிமை வேண்டி,

உயர்த்திடும் குரல்கள்,

சாதி மறந்து,
சமயம் துறந்து

சாயாமல் ,
சங்கொலி எழுப்பி

சந்தேகம் கிளப்பி,

சாக்காடு போக்க
கூப்பாடு போடும்,

கூடங்குளம்
கூன் முதுகு அதிகாரத்தை
நிமிர்த்திட!

(2011 களில் எழுதியது)