Wednesday, March 18, 2015

செல்லப் பிராணிகள் வளர்ப்பது பெரும்பாலும் குடும்பத்தலைவர்கள் விருப்பத்தில் அமைவது இல்லை.வீட்டில் பிள்ளைகள் இளம் பருவத்தில் விளையாட்டு விருப்பமாக பிறரைப் பார்த்து உருவாக்கிக் கொள்ளும் பழக்கமாகும்.

மீன் தொட்டி வாங்கி,மீன் குஞ்சுகள் வளர்ப்பது,குருவிகள்,கிளிகள் வாங்கி கூண்டில் அடைத்து வளர்ப்பது போன்ற பழக்கங்களும் இதில் அமைவது உண்டு.

தொடக்கத்தில் ஏற்படும் ஆர்வம் படிப்படியாக குறைந்து,வீட்டில் அம்மா பார்த்துக் கொள்வார்,அப்பா கவனித்துக் கொள்வார் என்கின்ற எண்ணம் மோலோங்கி வருகிறது.

இருக்கும் பணியுடன் குடும்ப பொறுப்புகளுடன் இதுவும் சேர்த்து விடப்படும்.நாயாக இருப்பின் இயற்கை உபாதைக்கு அழைத்துச் செல்வது, தினசரி உலாவிற்கு காலாற அழைத்துச் செல்வது, தினசரி குளிப்பாட்டுவது, உணவு உரிய நேரத்தில் அளிப்பது,மருத்துவரிடம் இட்டுச் செல்வது ஆகிய வேலைகளும் அவசியமாகின்றன.

இவையாவும் ஒரு குடும்பத் தலைவன் அல்லது தலைவி மேற்கொள்ள வேண்டிய அவசியப் பணிகளாக நெருக்குகின்றன.கூட்டுக் குடும்பம் உள்ள நிலையில் இது போன்ற சூழல் மிகவும் கடுமையாக அமைகின்றன.

குடும்ப நிர்வாகத்தில் பல பிரச்சனைகளை உண்டாக்கும் நெருக்கடியாகவும் விளங்குகின்றது.ஆரம்ப ஆர்வம் குறையாமல் தொடர்ந்து செல்லப் பிராணியை பராமரிக்கும் வேலையை சில மணி நேரம் மட்டும் அன்றாடம் குடும்பத்தில் உள்ள பிள்ளைகள் மேற்கொண்டால் மிகவும் நல்லது.

படிக்கிறோம், கல்லூரிக்குச் செல்கிறோம், நேரம் இல்லை என்று தவிர்த்திடும் பழக்கம் இன்று பரவலாக உள்ளது.

குடும்ப வேலைகளுடன் இதுவும் ஒரு கூடுதல் சுமையாக இருப்பினும், அதை ஏற்று சமாளித்திடும் தாய், தந்தை மற்றும் குடும்ப பெரியவர்களின் நிலைமையை அனுசரித்து வேலைப் பகிர்வினை மேற்கொண்டால்,

வளர் இளம் பருவத்தினர்,இளைஞர்கள் வாழ்வில் பல திறப்பட்ட அனுபவங்கள், படிப்பினை பெறுவதற்கு, அதன் வாயிலாக தம் தகுதியை உயர்த்திக் கொள்ளும் அரிய நடைமுறை வாய்ப்பு கிடைக்கும்.


வாங்குவது எளிது!
வளர்ப்பது அரிது!

வாங்குவது ஆர்வம்!
பேணுவது சிரமம்!

கொஞ்சுவது சுலபம்!




 கோடிப்பது துயரம்!!

No comments: