Friday, March 27, 2015

சிட்டுக் குருவி தினம்!

செத்து அழியுது  இனம்!

ஓங்கி உயரும் கம்பம்!

மச்சி வீட்டின்
உச்சியில்,

தகவல் பரிமாற்ற சேவை
தடையில்லாமல்!

ஒலி அலை உல்லாசம்
ஓயாத வியாபாரம் ,

ஒடுங்கிடும் துலாபாரம்!

விடுதலை வெளிச்சமான
சிட்டு வாழ்க்கை ,
சுதந்திர தேசத்தில்
நிரந்தரம் இல்லை!

தொலைந்த வாழ்க்கையின்
தொல்லியல் சின்னமாக !

விடுதலைக் கவியின் விருப்பம்
விடியாத பொழுதாக !

இன்னொரு இருள் சேர்த்திடும்
இன்ப பூமியாக !

நாள் கொண்டாடும் நலங்கிள்ளிகளாக!

இன்னொரு தினத்திற்கு
இனிப்பு வழங்க,

 இளி முகத்தோடு
 ஊடக ஒப்பனைக்கு
 தயாராவோம்!








No comments: