Saturday, February 24, 2018

மடைமாற்றம்!





போகிப்பண்டிகை இன்று.பிறந்த ஆண்டு விரைந்திட பொங்கல் நாள் வரிசையில், விடுமுறை அனுபவிப்பில் விழாக்கோலம்,  இல்லங்கள் தோறும் தேவை.

அவரவர் இயன்மைக்கு ஏற்ப, சூழல் அனுசரித்து கொண்டாட்டம். 'பொன்னை வைக்கும் இடத்தில் பூவை வைப்பது' என்பார்களே,  எந்நிலையும் விருப்ப வெளிக்குள் அமைந்திடும் போது,மகிழ்ச்சி அளிக்கிறது.

சுய மகிழ்ச்சி,சுற்றத்தார் மலர்ச்சி, கூட்டங்களை சேர்த்து,பிணைத்திட வேண்டும்.வாழும் காலம் நொடியாகினும் விருப்பார்வத்துடன் பயணம் செல்ல பக்குவப்படுத்தி பயன்பெற வேண்டும்.

தன்னுணர்வே தலையாயது. தவிக்கும், தாவிக் குதிக்கும் மன உணர்வுகளை வரையறை செய்து, ஒழுங்கியற்றி ஓங்கிட வேண்டும்.நெருக்கடிகளையும், நெளிவு சுளிவுடன் சந்தித்து சமாளித்து, தகு தருணங்களாக மடைமாற்றம் செய்யும் மனப்பயிற்சி இன்றைய சமூகக்கொ ந்தளிப்பு,  ஆரவாரத்துக்கிடையில்  தவிர்க்க இயலாத அவசியம்.

No comments: