அழ வைத்த பொழுதுகள் எம்மை எழ வைத்த விழுதுகள்!
உறங்கிய உணர்வுகளை, உள்ளடங்கிய உணர்ச்சிகளை வடிகால் ஆக்கியது!
வெளிப்படுத்தாத விம்மல்கள், தும்மல்கள் போல் வீறிட்டது.
கண்கள் தாரை, தாரையாக, விசும்பல் சேர்த்து, அரவணைத்து
வெளிப்படுத்திய அன்பு, ஊற்றின் உன்னதமாக,உடல், உள்ளம் கனம் குறைந்து ,
பறவையின் இறகென இலகுவானது.
இதற்குக் கூட உடல் நல சீர்கேடு, உன்னை உலுக்கி உண்மை உரைத்தது,
வாழ்க்கையின் புதிய அத்தியாயம்/முகவுரை முன்னிறுத்தியது.
(இதய அடைப்பு நோய் பாதிப்பில் உயிர் பிழைத்த பின்,
வயதான தன் தாயை சந்தித்தபோது நேரிட்ட, ஒரு மகனின் உணர்வு)
No comments:
Post a Comment