Friday, February 16, 2018

விழுது

         

அழ வைத்த பொழுதுகள் எம்மை எழ வைத்த விழுதுகள்!

 உறங்கிய உணர்வுகளை, உள்ளடங்கிய உணர்ச்சிகளை வடிகால் ஆக்கியது!

வெளிப்படுத்தாத விம்மல்கள், தும்மல்கள் போல் வீறிட்டது.

 கண்கள் தாரை, தாரையாக, விசும்பல் சேர்த்து, அரவணைத்து

வெளிப்படுத்திய அன்பு, ஊற்றின் உன்னதமாக,உடல், உள்ளம் கனம் குறைந்து ,

பறவையின் இறகென இலகுவானது.

 இதற்குக் கூட உடல் நல சீர்கேடு, உன்னை உலுக்கி உண்மை உரைத்தது,

வாழ்க்கையின் புதிய அத்தியாயம்/முகவுரை முன்னிறுத்தியது.

(இதய அடைப்பு நோய் பாதிப்பில் உயிர் பிழைத்த பின்,
 வயதான தன் தாயை சந்தித்தபோது நேரிட்ட, ஒரு மகனின் உணர்வு)

No comments: