கிலியில்லா உள்ளம் இல்லை
பசியில்லா வயிறும் இல்லை
ருசியில்லா உணவும் இல்லை
தோல்வியில்லாமல் வெற்றி இல்லை
தோளில்லாமல் தோற்றம் இல்லை
காலில்லாமல் நடையில்லை
குடியில்லாமல் கோள் இல்லை
படியில்லாமல் வீடில்லை
பல்லில்லாமல் சொல் இல்லை
சொல்லில்லாமல் சுவையில்லை
சோகம் இல்லாமல் சுகம் இல்லை
வேகம் இல்லாமல் ஓட்டம் இல்லை
விவேகம் இல்லாமல் வெற்றி இல்லை
பாவம் இல்லாமல் மீட்பார் இல்லை
பக்குவம் இல்லாமல் சமையல் இல்லை
பழியில்லாமல் குற்றம் இல்லை
குற்றம் இல்லாமல் தண்டனை இல்லை
தண்டனை இல்லாமல் திருத்தம் இல்லை
திருத்தம் இல்லாமல் மாற்றம் இல்லை
மாற்றம் இல்லாமல் ஏற்றம் இல்லை
ஏற்றம் இல்லாமல் இறக்கம் இல்லை
இறக்கம் இல்லாமல் உயர்வில்லை
உயர்வில்லாமல் உழைப்பில்லை
உழைப்பில்லாமல் மனிதன் இல்லை
மனிதன் இல்லாமல் ஆட்சி இல்லை
ஆட்சி இல்லாமல் அரசு இல்லை
அரசு இல்லாமல் நாடில்லை
நாடில்லாமல் வீடில்லை
வீடில்லாமல் விடியல் இல்லை
விடியல் இல்லாமல்
வெளிச்சம் இல்லை........!
No comments:
Post a Comment