Wednesday, February 28, 2018

தனிப்புத்தி!

என்னை வெளிப்படுத்த தெரியவில்லை, எண்ணற்ற செயற்பாட்டில். இவ்வளவு காலமும்.உழைப்பும், பயனும் உனக்கு பயன்பட்டதோ இல்லையோ?, சுற்றத்திற்கும், சூழலுக்கும் சுருதி சேர்த்து, வயப்பட்டது வக்கனையாக்,கரைந்த சேமிப்பும், கட்டுறுதி உடல் நலக் குறைவும், கவலை நோய் முதல் நாடியாக காலத்தை வென்றது.உடன் பிறந்தோரும்,உன்னருமை உணருவார் இல்லை.ஊர்ப் பேச்சின் உள்ளமே அவர் எல்லை.

சுமந்த பொதியை சோதிப்பவர் கூட்டத்தின் எண்ணிக்கை கூட்டுவார்.இங்கொன்றும், அங்கொன்றுமாக  பேசுந்திறன் காட்டுவார் பேதமை மாந்தர், பெருமைக் குரியவர்.முதுமை காலத்திலும் தனி வழியாக, தம் போக்கு மேம்பட தாளம் சேர்க்கும்; வகை புரிந்தவர்.

அவருக்குத்தான் புரியவில்லை என்றால்
உனக்கும் தான்,
ஊருக்குந்தான்.

பிறழ்நிலை மாந்தர் பேச்சு
யாவும்,
உம் புரிதல் வளையம் ஏற்கும்.

உள்ளது என்றாகி உலா வரும்
பொதுப் புத்தியாக.

தனிப்புத்தி தளம் சுருங்கி,
தாளம் போடும்
தன்னிச்சையாக.

No comments: