Saturday, February 24, 2018

சொற்களஞ்சியம்

வெகுமதி அறிந்த நமக்கு 'கொழு மதி' தெரியாது.தாயின் பேச்சிலே புதுச்சேரியிலே பயின் ற பழகிய ,அழகிய மொழி, மரபுச் சொற்கள் வரிசையில் மற்றொரு பதம். 'நொளப்புள்ள' என குழந்தைகள்  குறும்புத் தனத்தை                        குறிப்பது- கையில் பிசைந்து, தரையில் போட்டு எடுத்து உண்பதை குறித்த, எமது தாயின் சொல்லாடல்.இன்றைய தலைமுறை அறியாத சொற்களஞ்சியம்.

'சுண்டக் காய்ச்சு' என்று பழங் குழம்பை பக்குவப்படுத்தி,அடுத்த நாள் சாப்பாட்டிற்கு பயன்படுத்தும் பழக்கம் இன்று அற்றுப்போச்சு!. 'சுடுசட்டி', 'சிடுமூஞ்சி',' நோனா வட்டம்', 'ராங்கி விடாச்சி',' ராப்பத்து', 'கோணகழி'(விடாதே), 'கொப்பு காது', 'காதுமட்டை', போன்ற எண்ணற்ற அருந்தமிழ்ச் சொற்கள், அகராதியிலும் காணக் கிடைக்காதது, தென்படாதது.

அருகி, அழிந்து வருகின்றன.தாயின் தலைமுறை மறைவோடு., மாண்டுபோகும் பதங்கள்,பக்குவங்கள். மீட்டெடுக்கும் முயற்சி யார் கையில்?

முடிக்கும் முன்,
.'வீங்கி வெடிச்சாப்போல', 'வாங்கி முடிச்சாப்போல', 'முடிச்சி அவிக்கி',' மொள்ள மாரி','கேப் மாரி', ;திருட்டு திருகிசுத்து', 'தீனீப்பண்டாரம்' போன்றவைகளும் நம் ஆய்வுக்குரியது.

No comments: