Sunday, February 25, 2018

பொல்லாத மனம்.

கோபம், சினம் என்றறியப்படும் உணர்ச்சி, எதிர்மறைப் போக்காக நம்மை சிதறடிக்கும் கணநேரம் சூறாவளி, கொந்தளிப்பு சூழலாகும்.பல சந்தர்ப்பங்களில் பாதிப்பை பிறர் பகிர்ந்திட, அறநூல் தெளிவுரை எடுத்துக்காட்டில், முகநூல் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் தொடுக்கப்படும் பதிவேற்றங்களில், 'பிடித்திருக்கிறது' என ஆதரவு சொடுக்கு போட்ட பின்னரும், சருக்கல் அடைந்து, உடைவு ஏற்படுத்தி, இடைஞ்சல் சேர்த்து,அழுத்தம் கூடி, சமாளித்திட இயலாது.

சுழன்றடிக்கும் கொம்பை அலைக்கழித்திடும் புயலாக,சுருதி லயம் இழந்து, தாளம் தப்பி, தப்பாட்டம் நிகழும்.'மனம் போன போக்கில் குணம் போகும் ' என்பார். குணம் கெட்டால், அதிலும் தினம் கெட்டால், சூழல் தாக்கம் சூடேற்றி,கோடையின் கொடுமையை , தகிப்பை கொட்டும்போது, வெம்மை தாளாமல், செல்லிடம் இளப்பம் அறிந்து, பொரிந்து தள்ளும் பொல்லாத மனம்.

உள்ளம் உலைக்களமாக, தொடர் துறுத்தியில் நெருப்பேற்ற, தொழிற்கூட பணியாயின், இரும்பு வார்த்திட, இளகி வடிவமைத்திட இயலும்.இரும்பேதும் இன்றி, பணியற்ற பணிமனையில் ,வெற்றடுப்பு விசையுடன் கணப்பை மேலேற்றிடும்.குளிர்ந்த நீராக, தன்னுணர்வு தண்மை அடைந்து, தடுமாற்றம் புரிகிறது.தருணம் விடிகிறது.தகிப்பு குறைகிறது.உள்ளொலி உருப்படியாய் உயர்ந்திட ஒவ்வாமை யாதென முயற்சி முழக்குகிறது.

No comments: