Sunday, February 25, 2018

மறுமொழி

வயதான தாய் ஒரு நண்பர் வீட்டில். வயது 80தை கடந்து, கூன் விழுந்து, விந்தி,விந்தி நடந்து செல்வார்.இடையிடையில், லொக், லொக் என்ற இருமல் துணை நிற்க. வீட்டினர் அவரது தேவயை பூர்த்தி செய்தாலும், சோம்பிடாது சுறு,சுறுப்பாக ஒத்தாசையாக இருப்பார். சில தருணங்களில், உதவி என்ற நிலையில் அவருக்கு உபாதை ஏற்படும்போது, அக்கறை உள்ளவர், "வீட்டில், சும்மா இருக்கக் கூடாதா?" "இவ்வளவு பிரச்னை ஆகியிருக்காதே" எனும் போது, அவர் அளித்த மறுமொழி கீழ்க்கண்டவாறு எழுத்தில் வடிந்தது.

சும்மா இருக்க முடியாது
சுமையா நிற்க முடியாது
வாய் திறவாமல் முடியாது
சொம்பளக்க முடியாது
வம்பளக்காமல் விடியாது.

No comments: