சமூகமே வாத நோயால் பாதிக்கப்பட்டுள்ளதோ! தனி மனித உடல்/உயிர் நாடிகளில் வாத நொடி மிகுந்தால் நோயாக அறியப்படுகிறது.சமூகத்தின் உடலில்/உயிர் நாடியில் ஒன்றல்ல, ஓராயிரம் வாதங்கள் மேலோங்கி நிற்கிறது. சாதி வாதம், சமயவாதம்; கட்சி வாதம்; பிராந்திய வாதம் எனப் பலப் பல.அண்மையில், ஆண்டையின் கண்டுபிடிப்பு-பயங்கரவாதம்.இதற்கு அருமருந்து தருவார் யார்? எவ்வகை மருத்துவம் பயனளிக்கும்/ விடை காண தெரியாத மக்களிடையே, விடையறிந்தவர் உள்ளார்! அவர்தான் வலதுசாரி தேசியவாதம்.
'அமைதி காத்திடுங்கள்', 'அடங்கிப் போங்கள் , 'வீட்டிற்குத்திரும்புங்கள்', 'சுத்தமாக இருங்கள்',' அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி',' அதிர்ச்சி அடையாதீர்கள்', 'புனல் மின்சாரம்', 'அனல் மின்சாரம், 'அணு மின்சாரம்' ஆகியவை உங்கள் நலனுக்காக, புலம்பித் திரியாதீர்கள், 'கார்ப்பரேட்டு நிறுவனங்கள்' உண்டு, கலங்கி நிற்காதீர்கள். 'பாக்கெட் உணவு உண்டு', சமைத்து துன்பப் படாதீர்கள்.
'அமைதி காத்திடுங்கள்', 'அடங்கிப் போங்கள் , 'வீட்டிற்குத்திரும்புங்கள்', 'சுத்தமாக இருங்கள்',' அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி',' அதிர்ச்சி அடையாதீர்கள்', 'புனல் மின்சாரம்', 'அனல் மின்சாரம், 'அணு மின்சாரம்' ஆகியவை உங்கள் நலனுக்காக, புலம்பித் திரியாதீர்கள், 'கார்ப்பரேட்டு நிறுவனங்கள்' உண்டு, கலங்கி நிற்காதீர்கள். 'பாக்கெட் உணவு உண்டு', சமைத்து துன்பப் படாதீர்கள்.
No comments:
Post a Comment