Tuesday, March 13, 2018

தமிழகத்திற்கு வழி காட்டும் மகாராட்டிரம்!

தமிழகத்திற்கு வழி காட்டும் மகாராட்டிரம்.

*விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்தல்
*பருவம் தவறிய மழையால் சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்குதல்
*உரிய ஆதார விலையை நிர்ணயித்தல்

உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மகாராட்டிர மாநில விவசாயிகள் நீண்ட காலமாக போராடி வந்தனர்.அவர்களின் கோரிக்கைகளுக்கு  அரசாங்கம் செவிசாய்க்காமல் இருந்தது.

அகில இந்திய விவசாயிகள் சங்கம், கோரிக்கைகளை வலியுறுத்தி மகாராட்டிர சட்டப்பேரவையை முற்றுகையிட, நாசிக்கில் இருந்து நடை பயணமாக 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் 180 கிலோ மீட்டர் தொலைவினை, இரவு பகலாக 5 நாட்களில் கடந்து வந்து, மும்பாய் ஆசாத் திடலில் போராட கூடினர்.

வீரம் செறிந்த விவசாயிகளின் திரட்சி, ஆட்சியாளர்களை, நிலை குலைய வைத்தது. நீர்ப்பாசனத்துறை அமைச்சர்,விவசாயிகளின் பிரதிநிதிகளிடம் பேசி, அவர்களின் அனைத்து  கோரிக்கைகளையும் ஏற்பதாக உறுதி அளித்தார்.

இதிலிருந்து, தமிழக விவசாயிகள் சங்கங்கள் ஒன்றிணைந்து போராட வேண்டிய படிப்பினை கிடைத்துள்ளது.கட்சி வேறுபாடுகளை களைந்து, கோரிக்கை முனையை கூர் படுத்தி, செயல் திட்டங்களை சீர்படுத்தி, போராட உறுதி ஏற்று களத்தில் இறங்குவார்களா? அல்லது கலைந்து போவார்களா?

No comments: