Sunday, March 4, 2018

"துப்பாக்கியால் சிதைத்திட முடியாது"

ஆறு மாதங்களுக்கு முன் கர்நாடகாவில் வெறுப்பு அரசியலுக்கு பலியான பத்திரிக்கையாளர் தோழர்.கெளரி லங்கேஷ், அவர்களின் நினைவுக் கவியரங்கம்," புதிய உறவு", சிற்றிதழ் ,சிவசு அறக்கட்டளை மற்றும் இராதே அறக்கட்டளை ஆகியவை இணைந்து, "துப்பாக்கியால் சிதைத்திட முடியாது" எனும் தலைப்பில் இரண்டு மாதங்களுக்கு முன் நடத்திய கவிதைப் போட்டியின் நிறைவு விழா, புதுச்சேரி அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளன அலுவலகத்தில், இன்று(4.03.2018) காலை தொடங்கி நடைபெற்றது.

புதுச்சேரி மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த 120 கவிஞர்கள் கவியரங்கில் பங்கேற்று,அவரது துணிச்சல் மிக்க நினைவுகளை கவியாற்றல் மூலம் வெளிப்படுத்தினர். சாதி, சமய வேறுபாடு, கருத்து சுதந்திரத்திற்கு எதிரான செயற்பாடு, ஒற்றை பரிமாண இந்துத்துவ நிரலை ,நியாயப்படுத்தி, தனி மனித உரிமைகளை திட்டமிட்டு நசுக்குவது போன்ற ஆபத்தான ஒற்றை அடையாள அரசியலை, கடுமையாக விமர்சித்தனர்.


No comments: