Thursday, March 8, 2018

சரித்திர புளுகில்!

தில்லி தலைநகரில் 16லிருந்து
தமிழக விவசாயிகள் போராட்டம்
தனித்து விடப்பட்டோர் தவிப்பில்
அரைநிர்வாணம்,

மண்டை ஓடுகளுடன்
இலைகள் ஆடையாக,
நடுத்தெருவில்.

நியாயம்கேட்டு
பிச்சை எடுக்கும் அவலம்.

விவசாயம் பிச்சை கேட்கிறது
'காசாயம் கண்டு கொள்ளவில்லை'!

அழிப்பவனிடம் நியாயம் கோரி
இழப்பவர் நிற்கிறார்.

துடிக்கும் உணர்ச்சி
துவண்டுபோக

தொலைநோக்கு
தளர்ந்துபோக,
தடம் பதித்து
சாதனை நிகழ்த்தி,

தொழில் வளம் புதுக்குவார்
கணினி உலகேற்றுவார்,
மின்னணு மோகினி ஆட்டம்
மிகை சேர்ப்பார்.

மேதினியில் பேச்சால்
 முழங்கி
மேதமை நீட்டுவார்,
மேட்டுக்குடி போற்றுவார்,

காட்டுக்குடி அழித்து
கழனித் தொழில் ஒழித்து.

'மக்கள் குரல்
மகேசன் குரல்' என்பதறியார்
மாநில அதிகாரம் குவிப்பார்.

தேர்தல் நோக்கே
தினந்தினம் தீனியாகி,
அதிகார போதை
அலவின்றி ஏற்றி,

அதிகார அரசியல் சதிராடி
'சந்தம் இசைப்பார்'
சங்கம் அமைப்பார்,
சாமானியர் இறப்பில்.

வேதனை தீரவில்லை!
விவசாயி வாழவில்லை!'

'சாதனை மனிதர் ஆட்சியில்'
சரித்திர புளுகில்,
தரித்திரர் எழவில்லை!

(விவசாயிகள் சென்ற ஆண்டு தில்லியில் போராடிய நிலை கண்டு துயருற்று, உடல் நலிவுற்றிருந்த நிலையில் அப்போது எழுதியது.தற்போது பதிவு காண்கிறது)

No comments: