Friday, March 2, 2018

சிட்டம் கட்ட!

முன்னிலைப் படுத்தியவன் அல்ல
என்னிலை ஏற்றம் கருதியவன் அல்ல.

உன்னிலை உணர்த்த
பொதுநிலை உணர்த்த,

பல நிலை கடந்தவன்,
பதவியைத் துறந்தவன்.

தன்நிலை இழுக்க
தன்னழுத்தம் சேர்க்க,

தமிழ் அமைப்பு
தலை சேர்ந்தவன் அல்ல,

பட்டறிவில் புடம் போட்டு
பக்குவம் பல அறிந்து,

இயக்கப் போர்வை துறந்து
தனியானேன்.

கூட்டம் தவிர்த்து
கூர்ந்தறிந்தேன் தொலைவில்.

வட்டத்திற்குள் வட்டம்
சிட்டம் கட்ட,

சிறுபான்மைக் கூட்டம்
சிதறிப்போக,

பெரும்பான்மை பொருள் தேடி
பொருமிய மனிதர்,

போக்கின் பொழுதுகள்
யாவும் அறிந்தேன்.

போக்கில்லை
அவருக்கு.

இறுகிய மனநிலை
ஈர்த்திடும்
அணி சேர்க்கை.


சொல்லாடல் சுரங்கத்தில்
மல்லாடல் மைந்தர்கள்.

சுகமான தருணங்களில்
அகமான ஆர்வலர்கள்.

வினையாடல் விட்டொழிந்த
வீணர்கள் ,
வினோத துரோணர்கள்.

விடுதலையில்லை!

வாழ்நாள் சிறைவாசிகள்!
கருத்தியலின் அடிமைகள்!!

No comments: