Wednesday, March 21, 2018

சனநாயகம் அழிகிறதா?

நண்பர்களே!

பிப்ரவரி 17, 2018ல் 'டைம்ஸ் ஆப் இந்தியா' நாளிதழில் ஒரு கட்டுரை இடம் பெற்றிருந்தது. அதன் சுருக்கம், பின்வருமாறு.

சனநாயகம் அழிகிறதா?
அமெரிக்காவில் உள்ள மற்றும் உலகளவில் அறியப்பட்ட, அறிவுசார் சமூகம் மற்றும் அறிஞர்கள், அண்மைக் காலமாக சனநாயகம் அழுகிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது என்பதை எழுதியும், பேசியும் வருகின்றனர்.அவர்களில் சிலர் மத்திய நிலை தாராளவாதிகள், பிறர் மித போக்குள்ள பழமைவாதிகள் ஆகும்.

தற்பொது நிலவிடும் அரசியல் சூழ்நிலையில் வெளிப்படையான பாசிச சர்வாதிகாரிகளைக் காட்டிலும் அச்சுறுத்தல், பிரபலமான அதிகாரத்துவம் படைத்தவர்கள் மூலம் வஞ்சகமாக,உள்ளிருந்தே, நாடாளுமன்ற தேர்தல் சனநாயக அலகிற்குள் சனநாயகத்தை உறிஞ்சி வருகின்றனர் என்று அவர்கள் அனைவரும் எச்சரிக்கை விடுக்கின்றனர்.

இவர்களில் ஒருவர், 'டேவிட் புரூம்', அமெரிக்காவின் சனநாயகத்திற்கு ஏற்பட்டிருக்கும் ஆபத்து குறித்து சென்ற வாரத்தில், புரூக்கிங்சு நிறுவனத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் தமது கவலையை பகிர்ந்து கொண்டார்.

.சமீபத்தில் வெளியிட்ட தமது புத்தகத்தில்--'டிரெம்போ கிரேசி: தி கரப்ஷன் ஆப் தி ரெப்பப்ளிக்'கில், அமைப்புகள் அல்லது அரசியலமைப்பு சட்ட விதிகள் ஊடுருவி வரும் அதிகாரத்துவத்திற்கு எதிராக நிற்க, போதிய வல்லமை அற்றதாக உள்ளது என்று சுட்டிக் காட்டியுள்ளார்.

." அரசியலமைப்பு சனநாயகம், முதலில் விளையாட்டு விதிமுறைகளுக்கு உட்பட்டு முற்றாக ஈடுபாடு உடையதாக அமைக்கப்பட்டுள்ளது". தற்போதைய அதிகாரத்துவ தலைவர்கள் மற்றும்  அவரை இயல்விப்போர், தமது சுய விதிமுறைகளுக்கு ஏற்பவே செயல்படுகின்றனர்.

 அதுபோல், ஆர்வார்டு பல்கலைக் கழகத்தின் இரண்டு பேராசிரியர்கள், ஸ்டீவன் லெவிட்ஸ்கி மற்றும் டேனியல் சிப்லாட் தமது புத்தகத்தில்--அவ் டெமாக்ரெசிஸ் டைய்: வாட் இஸ்ட்ரி டெல்ஸ் யு.எஸ். எபவ்ட் அவுர் புயூச்சர்- அமைப்புகள் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட தன்னதிகார ஆட்சியாளர்களை ஆள, செல்வாக்கு செலுத்திட போதுமானவை அல்ல.

அவர்கள் வசம் ஊடகம் மற்றும் தனியார் துறை கட்டுப்பாட்டில் உள்ளது, அவர்கள் அரசியல் விளையாட்டு விதிகளை மாற்றி எழுதி அரசியல் எதிரிகளுக்கு எதிராக திருப்பி வருகின்றனர்.

" தன்னதிகாரத்திற்கான தேர்தல் பாதையின் முரண்பாடான துயரம் யாதெனில், சனநாயகக் கொலையாளிகள் சனநாயகத்தில் உள்ள அதே அமைப்புகளை பயன் படுத்துவதேயாகும்--படிப்படியாக, நுணுக்கமாக ,மேலும் சட்ட ரீதியாக- பயன் படுத்தி அதை அழிப்பதேயாகும்"

தன்னதிகாரம் மிக்கவர்கள் எங்கிருந்தோ வருபவர் இல்லை. ஏற்கனவே நிலவிடும், இயல்விக்கும் நிலைமையை சரியாக பயன்படுத்திக் கொண்டு, மிக தந்திரமாக, விரிவுபடுத்தி, தேசியவாதம் மற்றும் மத உணர்வுகளை ஈர்க்கும் தவறான முன்னெடுப்புகளை , ஏற்கனெவே பாதிப்பிற்கு உள்ளாகும்  அடித்தட்டு மக்கள் மத்தியில் செய்கின்றனர்.

அமெரிக்காவில், அவ்வாறான நிலைமை உள்ள அரசியல் தளங்கள்: தேர்தல் முகாமிற்கான நிதி அளிப்பு ஏற்பாடு மற்றும் ஊடகத்தின் வளைப்பு ஆகும்.

இச்செய்திகள், நமது நாட்டு சனநாயகப் போக்கையும் தொட்டு, தோலுரித்துக் காட்டக் கூடியதாகவும் இருக்கின்றது.

No comments: