ஆன்மா கலந்து விடுகிறது ஆண்டவனிடம்,
சமயக்குரு.
கட்டவிழ்கிறது அழியாக் கூறுகளாக,
மெய்யறிவாளர்.
முடிகிறது பிறப்பு ஆயினும் பொலிவுறுகிறது மறுபிறப்பாக,
புதிர் அறிவர்.
கற்பனை உலகிற்கான தியாகம், ஈகம்,
பொதுவுடமையாளன்.
நிலவறையில் நெடுந்துயில்,பகுத்தறிவாளன்.
எம் வருகை எமக்கே தெரியாது, இறப்பின்
குழப்பம்.
காட்சிப் படிமத்தில் மடிந்தது பன்முறை,
மெய்மையில் அன்று.
கவலை ஏன் சாவை எண்ணி?, நிகழ் கணத்தில்
நீ வாழும்போது, வினவுகிறது வாழ்க்கை
(ராஜேஷ் ஆய்வு மாணவர், பயன்முறை உளவியல் துறை, புதுச்சேரி பல்கலைக் கழகம் ஆங்கிலத்தில் எழுதி வெளியிட்டதை, தமிழில் தருகிறேன்)
No comments:
Post a Comment