Thursday, March 29, 2018

நொறுக்கிடும் வெறி !

இறந்த மாட்டின் தோல் உரிப்பான்,
இறக்கு மதியாளரிடை
ஏற்று மதியாளன்;
கோ காப்பாளன்.

கோலடுத்து உரிப்பான் தோல்
உரிப்பான் ஊரறிய,
காவலும் ஒழுங்கும்;
எட்டிப்போக.

ஆவலுடன் பார்க்கும் மக்கள்,
அல்லல் போக்க துணை இல்லை!
துடித்தார் துவண்டார்;
உழைப்பின் பலன் யாதென புரிந்திடாது
புழுபோல் நெளிந்தார்;           

தசை கிழிய, ரத்தம்  கசிய,
ஏன் பிறந்தேன்? இழிசனமாய்!
என நொந்த நிலையில்;
வெந்த புண்ணின் வேதனை.

காவியின் கண்களில் கருணையை
சேர்க்கவில்லை!
கொத்து, கொத்தாய் மடித்து
 வீசிய கூட்டம் 2002ல்.

வெறியூட்டியே ஆயுதங்கள் கூட்டி,
ஆள் சேர்த்து ,
பெரும்பான்மை வெறி சேர்த்து,
நெறி பிறழ்ந்து நொறுக்கிடும்.

வாணர சேனைகள்
வலம் வரும்.
காவல் தடியேந்தி கவலையின்றி
'குசராத்தின் மாதிரி'

'இந்தியாவில் தயாரிப்போம்'
'ஒடுக்கப்படும் மக்களை ஒடுக்கிட,
ஒழித்திட ஆயுதம் தரிப்போம்'!!

No comments: