Friday, March 9, 2018

விந்தையே!

ஊடகச் செய்தி
ஒவ்வொரு நாளும்:

"யானை அட்டகாசம்"
"பயிர்கள் நாசம்"
"கரடி பயங்கரம்"

"கதறிய மக்கள்'
"சிறுத்தை நடமாட்டம்"

"தேயிலைத் தோட்டத் தொழிலாளர் பதட்டம்"
"கூண்டு வைத்து பிடித்தனர்"
"மயக்க ஊசி செலுத்தினர்"
"வெடி வைத்து விரட்டினர்"

"அடித்தே கொன்றனர்"
"பால் கொடுக்கும் யானை"

"மதகடியில் ரயில் மோதி மரணம்"
"ஓசூரில் பேருந்து மோதி
பலத்த காயம்"

"15 தினங்களுக்குள் 5 யானைகள் பரிதாப மரணம்"

மனித உரிமை உரத்த பேசும்
ஓயாத குரல்கள்
விலங்கு உரிமை விலக்கி
வைப்பது விந்தையே!

சிந்தையெல்லாம்
தம்மைப் பற்றியே,
சுழலும் மனிதம்.

சூழல் உரிமை
உண்மைப் பேண
மறந்திடும்!

No comments: