Tuesday, March 6, 2018

ஆடி இப்படியாக!

ஆடி மாத அனுபவம். ஓர் இரவு, இப்படியாக!

  ஆடி மாதம் ஆலயங்களில் அன்றாடம் பூசைகள்.கஞ்சி வார்த்தல், கூழ் ஊற்றல்; சாமி ஊர்வலம்; வீதி உலா; நிகழ்ச்சிகள் வரிசையாக. தேர் வலம், வாத்தியங்கள் வரிசை சேர்க்க.இளைஞர் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம்

.இடையிடையே வாண வேடிக்கை, பட்டாசுகள் வெடி, என கோலாகலம், கும்மாளம்.பகலில் தொடங்கி, இரவு நீளும். நிசப்த இரவின் நிம்மதி நெளியும், மனம் சுளிக்கும்.ஒலி, ஒளி பெருக்கிகளின் ஒய்யாரம்,ஓலம் கூட்டிசைக்கும்.அமைதி ஆர்ப்பரிப்பிடம் கெஞ்சும்.நிம்மதி தேடிய உறக்கம் கெஞ்சும், சப்தங்களின் ஆட்சியிடம்.

இரவு கடந்தும்,விடியல் நெருங்கும் வேளை, துயில் இழந்த குயில், காகம், பட்சிகள் ,உயிரினங்கள் துடித்தெழும், அச்சம் ஆடிப்போய் அரவத்துடன் குழந்தை அளறல், வீல் ஒலிபோல், விபரீதம் ஏதோ என்றுணர்ந்து, வைகறை வருத்தத்துடன் மூடி, மூடித்திறந்த விழிகள் எரிச்சலுடன், கடைசி வெள்ளி இதுதான் என்றறிந்தோ, என்றறியாமலோ பொழுது புலரும் பொருமலுடன், இருமலும் சேர்த்து.

 பொல்லாங்கு மனிதரின் போக்கு சகித்து.

No comments: