Sunday, March 4, 2018

சமத்துவமின்மைக்கு எதிராக!


இந்திய சமூகச் செயற்பாட்டுப் பேரவை, புதுச்சேரி, சமத்துவமின்மைக்கு எதிரான போராட்ட வாரம் 19 முதல் 26 சனவரி, 2018ஐ முன்னிட்டு,

 சமத்துவமின்மைக்கு எதிராக உலகெங்கும் மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.இந்தியாவில் தமது வாழ்விடங்களிலிருந்து கொடூரமாக விவசாயிகள், நகர ஏழை மக்கள், மற்றும் தெரு வியாபாரிகள் அகற்றப்படுவதை நாம் தடுத்திடுவோம்.

சமத்துவமின்மைக்கு எதிராக போராடுவோம் என்கின்ற முழக்கத்தை முன்னிறுத்தி, புதுச்சேரி, தலமை அஞ்சல் நிலையம் எதிரில் ஆர்ப்பாட்டம்,  27, சனவரி அன்று காலை 10 மணி அளவில்  நடைபெற்றது.

அமைப்பாளர் சீனு.தமிழ்மணி, தோழர்.மோகனசுந்தரம், சி பிஎம் எல்.தோழர்.பாலசுப்ரமணியன், மீனவர் விடுதலை வேங்கைகள் தலைவர் மங்கையர்செல்வன், சமூகச் செயற்பாட்டாளர், முத்துக்கண்ணு மற்றும் பல சனநாயக அமைப்புகளின் தலைவர்கள், பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

உலக பொருளாதாரப் பேரவைக் கூட்டத்திற்காக சுவிட்சர்லாந்து டவோஸ் மலை வாச தலத்தில் வசதி படைத்த பகட்டுக் கூட்டாளி நாடுகள் சமத்துவமின்மையை அதிகரித்திடவே முகாமிட்டிருக்கின்றனர். சமத்துவமின்மையை மக்கள்தான் ஒழிக்க இயலும்.

சமமான உலகம் கோரி மக்கள் அணி திரள்கின்றனர் எல்லைகளைக் கடந்து, என்கின்ற உணர்வு பூர்வமான எண்ண ஓட்டங்களை, யதார்த்த நிலையிலிருந்து அனுபவித்திடும் துன்ப நிலைகளில் பாடம் பெற்று, உலக வணிகப் பேராசை, சுரண்டலுக்கு அடிபணியோம், என்பதை உரக்க உணர்த்திய  வெகுதிரள் போராட்டமாக  ஆர்ப்பாட்டம் அமைந்தது.

No comments: