Thursday, March 8, 2018

கங்குல் கிழித்து!

(மெரினாவில் திரண்ட சல்லிக் கட்டு போராட்ட உணர்வை கண்டு, மெய்சிலிர்த்து அப்போது வடித்தது, தற்போது பதிந்தது)

ஆர்தெழுந்த கூட்டம்
ஆலம் விழுதென ஊட்டம்.

பொறுத்திருந்த போக்கு
போகியானது நேற்று.

பொங்கிய உணர்வு
வெளிப்பட்டது இன்று.

போக்குண்டு தமிழருக்கு
பொழுதைக் கடந்து,

போர்ப்படை திரண்டு,
பொங்கு கடல் சங்கநாதத்துடன்
பொருத்தி போராட்டம்.

அதிகாரம் ஆட்டம்
ஆலோசனை நீட்டம்,
அக்கறை காட்டும்.

சர்க்கரைத் தமிழனென்றக்
 கணக்கு தப்பாகி,
கருப்பட்டி தமிழனாக
கங்குல் கிழித்து,

கரம் உயர்த்தி
உரிமைக்குரல் ஓங்கி ஒலித்து,
கலை,பண்பாடு காத்திட
அறவழி நின்று,

அரசியல் பிழைத்தோர்க்கு
கூற்றமாகி,
அறிவின் வெளியில்
அகண்ட உணர்வில்,

திரண்ட நிலை,
இந்தியச் சமூகம்

உலகச் சமூகம்
மிரண்ட நிலை.

ஊடகம் மறைத்த உன்மைகள்
ஊழல் திரையிட்ட காட்சிகள்,

அத்தனையும் வெளிப்பட
 உண்மை நிசமாகி
 உயர்ந்து நிற்கிறது.

ஓயாமல் முழங்கி
ஒற்றுமை ஏற்றி!!

No comments: