Monday, March 19, 2018

பெண்களைப் பேணுவோம்!

(புதுச்சேரி சிந்தனையாளர் பேரவை கவியரங்கம், 18.03.2018, ஞாயிறு,, மாலை ஜோதி கண் மருத்துவமனையில் நடைபெற்றது.அப்போது வாசித்த கவிதை)

பெண்களைப் பேணுவோம்!

உன்னுள் பாதி அவளில்லை!
உயிரில் பாதி அவளாகும்.
கண்களில் பாதி அவளில்லை!
கண்ணின் பாவையே அவளாகும்.
உள்ளதென்பது நீயாயின்,
உண்மையென்பது அவளாகும்.

கருவான போதும் போராட்டம்!
கழிந்த பிறகும் போராட்டம்!
போராட்டமே வாழ்க்கையாக- அவள்
ஓர் 'இடது சாரி'

எங்கிருந்து எழுவது?


சுயத்தில் விடுதலைப் பெற வேண்டும்;
சூழ்ச்சி தாண்டி எழ வேண்டும்;
கவிந்திடும் சூழல் புரிதல் வேண்டும்;
கவின்மிகு தலைமை ஏற்க வேண்டும்;
பெண்கள் பெருமைப் புலம் வேண்டும்;
பெருவெளிப் பயண நிலை வேண்டும்.

No comments: