Friday, March 2, 2018

பெண் ஊழியர்/ஆசிரியர்களின் நிலை!

தனியார்  கல்வி நிறுவனங்களில், பள்ளிக்கூடம் தொடங்கி கல்லூரி வரை ஆசிரியப் பணியில், அலுவல் பணியில் சேர்ந்திடும் ஊழியர்கள் பணிநிலைமைகள் குறித்து பெறப்படும் தகவல்கள் நிறைவளிப்பதாக இல்லை.குறிப்பாக,பெண் ஊழியர்/ஆசிரியர்களின் நிலை மோசமாக உள்ளது.நாள்தோறும் பாலியல் கொடுமைகள்,தொல்லைகளுக்கு உள்ளாகும் ஆசிரியைகள் பலர் தம் இன்னல்களை வெளிப்படுத்த முடியாத அவலம்.

அப்படியே, சில சந்தர்ப்பங்களில், சகிக்க முடியாமல் வெளிப்படுத்திடும் சம்பவங்கள், புகார் அளவில், காவல் நிலையத்தின் இருப்புக் கதவைத் திறக்க முடிவதில்லை. பள்ளியின் தாளாளர் பெரும்புள்ளியாக, கட்சி அரசியல் தொடர்பானவர் என்றால், புகார் அளிப்பவருக்குத்தான் பிரச்னை அதிகமாகும். அடியாட்கள் துணையுடன், அதிகார மமதையுடன், ஆட்சி செலுத்திடும் 'கரும்புள்ளிகளை', தொட, காவல் துறையும் கவனம் செலுத்தாது.

'தனி மனித உரிமை', ' பெண்ணுரிமை' ' பேசும்,  பதிவுகள் மேற்கொள்ளும் குடிமைச் சமூகம், கண்டும் காணாது தமிழ்ச் சங்கங்களில், அரங்குகளில் மேடையேறும், காணொலிக் காட்சி தரும், சாதனைப்பட்டியல் சேர்த்து நாள்தோறும்.

கல்வித்துறை, காசுள்ளவர் கைப்பாவையாக, பிரச்னை எதுவாகினும் தமக்கு தொடர்பில்லை எனும் நடுநிலைப் பார்வை, அரசாங்க உயர் அதிகாரம், பல ஊடகச் செய்திகளில் இதுவும் ஒன்றே!

சலனமற்று, ' மக்களாட்சி நிர்வாகம்', 'வெளிப்படை நிர்வாகம் , 'ஊழலற்ற நிர்வாகம்' என்கின்ற கவர்ச்சியான முழக்கங்கள் வாடிக்கையாக !
 வலம் வரும் வக்கனையாக!

No comments: