Thursday, March 1, 2018

மருத்துவக் கழிவுகள்

மருத்துவக் கழிவுகள் படும்பாடு சொல்லி மாளாது. புதுச்சேரி மாநிலத்தில் ஏழெட்டு பெரிய மருத்துவமனைகள் அரசுத்துறை மற்றும் தனியார் துறையில் செயல்பட்டு வருகிறது. தெரிந்தவரையில், புதுவை அரசு மருத்துவமனைக்கு, இந்திரா நகர், கோரிமேடு பகுதியில் ஒன்று உள்ளது. அதற்கும் சரிவர உட்கட்டமைப்பு, பணியாளர் போதிய அளவில் இல்லை என அரசுக்கு தெரிந்திருந்தும், கண்டும் , காணாமல் இருக்கிறது.

'சிப்மர்',  மத்திய அரசு மருத்துவமனையில் மட்டும், முறையான மருத்துவக் கழிவுகள் அகற்றும் ஏற்பாடு, சுற்றுச்சூழல் சட்டத்தின் விதிகளின்படி உள்ளது.

இதுமட்டுமின்றி, பல தனியார் சிறிய அளவிலான மருத்துவமனைகள், புற்றீசல் போல்   பெருகி உள்ள நிலையில், இவற்றிலிருந்து தினசரி உருவாகும், மருத்துவக் கழிவுகள் எவ்வாறு கையாளப்படுகின்றன?  இதில் ஏகப்பட்ட குளறுபடிகள் நிலவுவதாக, விவரம் அறிந்தவர் கூறுகின்றனர்.

இது குறித்த கவலை, இவ்வாறு வெளிப்பட்டது;

காத்திடும் மருத்துவம்
கழித்திடும் கசடுகள்,

கண்டபடி சென்றிடும்
காற்றில்.

கட்டுப்படுத்துவர் யார்?
கவலை கொள்வார் யார்?

No comments: