Thursday, March 29, 2018

திண்ணை வரை விடுதலை!





உறவுகளுடன் வாழ்ந்தால் பூக்கோலம்தான்! கரவுகளுடன் வாழ்ந்தால் சாக்கோலமா? உறவுகளை தொலைத்து உருப்பட முடியுமா? வளர்க்கப்பட்ட சூழல், வசம் தொலைந்த சுயம், வளைய வருமா?

 அங்கு செல்லாதே! இங்கு செல்லாதே! அடுக்கடுக்கான கட்டளைகள், சிறார் பருவத்தின் சிறகை கத்தரிக்க, தத்தி, தாவி தெருக்கதவைக் கடந்து திண்ணை வரை விடுதலை வெளிச்சம்;

காற்று புன் முறுவலுடன் வரவேற்க; கிட்டாத சிநேகிதம் எட்டிப் பார்க்க; சில கணம் சிட்டென பறந்தோடி; பொழுதுபோக்க; அழைக்கிறார் உள்ளிருந்து,' எங்கே சென்றாய்?

' வேனிற்காலம், வேர்க்குரு வாரிக்கொட்டும்; அம்மை ஆள் தேடும்!' குடும்ப எச்சரிக்கை ஒலிப்பானுக்கிடையில், விளையாட்டும் வினை சேர்க்கும்.

ஆட்டம் போட்ட அலுப்பில், பாட்டியின் அரவணைப்பில், விடுகதைகள் தாலாட்ட;  நீதிக்கதைகள்பாலூட்ட; தாழ்வாரக் காற்று தாளம் இசைக்க; வெண்ணிலா வெளிச்சம் தூக்கம் சேர்த்திடும் வெறுந்தரையில்!

No comments: