Monday, March 12, 2018

எகத்தாளம்

எதற்கெடுத்தாலும் ஏளனம், எகத்தாளம், ஒரு சிலர் வெளிப்பாடு.
சுளிப்பும், வலிப்பும் அவர் தோற்றம்.சுடு சொற்கள், சட சடவென வெளிக்கிளம்பும்.

 அழகிய முகம் அட்டகோணமாக, பட,படப்புடன், நிதானம் இழந்து, செவி மடுக்கும். சிந்தனை குறைந்து சில நேரம்.

அடுத்தவர் கூறுவதை தடுத்தாள்வதே சரி என்னும் பக்குவம். பழக்க, வழக்கமாக, இவரது வாழ்க்கைப் பயணம்.

No comments: