துயிலெழும்போது துலங்கிய எண்ணம், கிளம்பிய சிந்தனை; திரண்ட கருத்துக்கள்; வடித்திட ஏடெடுத்தபோது; வசப்படாத மாயம் பல தருணங்களில். மனத்தின் கண்ணாமூச்சி!
சுற்றி எழும் சத்தம், சந்தடி, வந்த அடி தெரியாமல் சிந்தனை வழி மாற்றிடும் வந்த விசையில் தங்க இயலாது!
தவித்த கணம் கடந்தும் தயாரிப்பிற்குள் வராது! பல முறை இதுபோல் நிகழும், நீளும் .
உள்ளக் கடலின் ஓயாத அலை அடிப்பில் உற்சாகம் உடைந்து!
No comments:
Post a Comment