Wednesday, April 4, 2018

பழங்குடி மொழி காத்திடும் பூர்வீகக் குடிகள்

ஏப்ரல் 3 ந்தேதி, டைம்சு ஆப் இந்தியாவில் வெளியான, அழிவின்  விளிம்பில் உள்ள  பழங்குடி மொழிகளைப் பாதுகாத்திடும் பூர்வீகக் குடிகள்.


அலு குரும்பா, நூற்றாண்டுகள் பழமை வாய்ந்தது, நீலகிரியில், சற்றேறக்குறைய 1000 பேர் பேசக்கூடிய ஒரு மொழியாகும்.இந்த ஏப்ரல் மாதத்தில் அதற்கு எழுத்திலக்கணம் மற்றும் சொற்றொடரியல் அமையவிருக்கிறது.இம்மொழி பேசும்,  33 வயது, மலைவாழ் சமூகத்தின்.ஆர்.விசுவநாதன்,பாரதியார் பல்கலைக்கழக மாணவர். இதற்கான ஆய்வு செயல்பாட்டிற்கு முனைவர் பட்டம் பெறுகிறார்.

" நாங்கள் கன்னட கிளைமொழியை பயன்படுத்துகிறோம், எழுத்து வடிவம் கிடையாது.எமது மொழியை எழுத தமிழ் மொழியை பயன்படுத்தியுள்ளோம். எமது பணி, அருங்காட்சியக பொருளாக இம் மலைவாழ் மக்களைப் பற்றி, பின்னாளில் அறிந்து கொள்ள இயலும்' என்கிறார் ஆய்வாளர்.

"எமது இளம் பழங்குடியின் வயது 20 ஆகும். வாழ்நாள் எதிர்பார்ப்பு எம் மக்களுக்கு, 60 ஆண்டுகளைத் தாண்டவில்லை.வேலைக்காக நகரங்களுக்கான மக்களின் புலப்பெயர்ச்சி, மக்கள் தொகை படிப்படியாக சரிவு" ஆகியவைகளும் மொழி அழிவிற்கு காரணம் என்கிறார் தமது ஆய்வுக் கட்டுரையில், கோத்தகிரி அருகே உள்ள கிராமத்தில் வசிக்கும் இவர்.

காலனியாதிக்கம், இடப்பெயர்ச்சி, மற்றும் நோய்க் கொடுமைகளிலிருந்து மீண்டு, வரி வடிவம் இல்லாது,பேச்சு வழக்கில், நினைவு நிலையிலேயே வாழ்வது என்பது சாதரணமான சாதனை அன்று.

 வாய்மொழி வழக்கு என்பது, அலுகுரும்பா, தோடா, கோடா, எரவல்லா மற்றும் பேடா பழங்குடி மொழிகளுக்குரிய  பாரம்பரியம் ஆகும்.மொழி வகைகள் மற்றும் கிளைமொழிகள் காலத்தின் தாக்கம், புலப்பெயர்ச்சி, பிரதான மொழிகளின், ஊடுருவல்,விசுவாசிகளின் தளம் இழப்பு ஆகிய காரணிகள் இம்மொழிகளை வாயடைத்து விட்டன.

அணமையில் வெளியான ஆய்வில், திராவிட மொழிக் குடும்பம், 80 வகையான மொழிகள், 220 மில்லியன்(22 கோடி) மக்கள் தொகுதியினரால் தெற்கு மற்றும் மத்திய இந்தியப் பகுதிகளில் பேசப்பட்டு வருகின்றன.4500 ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றியது என்றும் இம்மொழிகளில் எத்தனை நீடிக்கும் என்று உறுதியாக கூற இயலாது.

இந்திய மக்கள் மொழி அளவைத்துறை, கணேஷ்தேவி, இந்தியாவின் வாழும் மொழிகள் குறித்து பதிவு செய்பவர், வீழ்ச்சியில் உள்ள மொழிகள் யாவும், "கணினி ரீதியில் இறந்துவிட்டன", "தமிழ்நாட்டில், 17 மொழிகள் அவ்வாறு இறந்துவிட்டன, அவற்றில் சில பேட்டா குரும்பா மற்றும் எரவல்லா" என்கிறார்.

மேலும், ஒரு மொழியின் வீழ்ச்சிக்கு பல காரணங்கள் இருக்கின்றன, கல்வி அமைப்பில் மொழி பயன்பாடின்றி இருப்பது முதல் அதை பேசும் மக்கள் புலம்பெயர்வது வரை உள்ளதும் ஆகும்.

 மைசூரில் உள்ள, மத்திய இந்திய மொழிகள் நிறுவனத்தின் முன்னாள் துணை இயக்குநர், வி.ஞானசுந்தரம், எரவல்லா மொழி குறித்து ஆய்வு செய்து அம்மொழியின் கடைசி பேச்சுக்குரியவர் முருகேசன் உள்ளிட்டோரை ஆய்வு செய்து ஆவணப்படுத்தியவர், " மொழிகள் குறித்து ஆய்வு செய்கின்றனர்....ஆனால் ஆய்வு என்பது ஒன்று, மொழி பேசுவது என்பது வேறு" என்று பதிவு செய்கிறார்.




No comments: