Friday, April 13, 2018

"அல்லியோ, மல்லியோ, அல்லியோ, மல்லியோ"


எங்கள் தெருவில் பூ விற்பவன், மிதிவண்டியில் வழக்கமாக வியாபாரம் செய்பவன். வழக்கத்திற்கு மாறாக உரத்த குரலில் இன்று, சற்று பொழுது சாய்ந்த பிறகு, சுருதி கூட்டினான்.

பொழுதுபோன பிறகு, ஞாயிற்றுக்கிழமையின் இன்பம் துய்க்க, பொழுதை வீணாக்காமல்! தொலைக்காட்சி பெட்டியின் முன்.குடும்பம் , குடும்பமாக மகிழ்ச்சியுடன் இருக்கும் தருணத்தில், ஊடகத்திற்கு போட்டியாக கூவி அழைத்தான். என்றும் செல்லுபடியாகும் சரக்கு இன்று, இன்னிக்கு முடியலே! முணு முணுத்தான். இருந்தாலும், "அல்லியோ, மல்லியோ" அலறியது!

பேச்சு பெறாக்கில், அடுத்தவரிடம் கச்சைக் கட்டி, கச்சேரி வைக்கும்போது, வெளிப்படும் பல்வேறு வாக்கியங்களில், பூக்காரனின்,"அல்லியோ, மல்லியோ", தாயின் பேச்சு மொழியில் வெகுகாலம்," ஏண்டி? ஏண்டி?, நான் என்னா அல்லியோ மல்லியோன்னா இருக்கிறேன், உன்னைப்போல்",

 இதன் அர்த்தம் வெகுகாலமாக புரியாமல், பல ஆண்டுகள் கழிந்தது. அதன் தோற்றம்: பூ விற்க வாடிக்கையாளரை அழைப்பது, அலைச்சல் படுவது எனும் பொருளில், " நான் என்னா அலைகிறேன், உன்னைப்போல என்று ஒப்பிட்டு பேசும் மொழியாக வளர்ந்த, வாய்த்த தமிழ்.

தற்செயலாக, தெருவோசை குரல் கேட்டு, திகைத்துப்போய், புதிருக்கு விடை கிடைக்க,' 'யுரேக்கா', என்ற நியூட்டன் மன நிலை! கண்டு கொண்டேன்! புரிந்து கொண்டேன்! வினாடி வினாவில் கை தூக்கிடும் மாணவன் போல், விரைந்திடும் மன வண்டி!

No comments: