ஆண்டவனிடம் கோபமில்லை,
ஆள்பவனிடம்.
மாண்டவனிடம் கோபமில்லை,
மாள்பவனிடம்.
தூண்டியவனிடம் கோபமில்லை,
துவண்டவனிடம்.
வேண்டியவனிடம் கோபமில்லை,
தாண்டியவனிடம்.
தடுத்தவன் மீது கோபமில்லை,
தடுக்கியவனிடம்.
ஒடுக்கியவன் மீது கோபமில்லை,
முடுக்கியவனிடம்.
விலக்கியவன் மீது கோபமில்லை,
விழுந்தவனிடம்.
2 comments:
கவிதை நன்றாக இருக்கிறது.
"வேண்டியவனிடம் கோபமில்லை....தடுத்தவன் மீது கோபமில்லை"
வாக்கிய அமைப்பு வேறுபாட்டில் ஏதும் காரணம் உள்ளதா?
நன்றி
Post a Comment