Friday, April 6, 2018

"தீங்கான"/"ஆபத்தான மருந்துகள்"

"டைம்சு ஆப் இந்தியா", 6,ஏப்ரல் செய்தி--" ஒழுங்கமைப்பு அங்கீகாரம் இன்றி விற்பனையாகும் மருந்துகள் ஆபத்தானவை".

மத்திய அரசு நலவழித்துறை கவனத்திற்கு வந்துள்ள அதிர்ச்சி அளிக்கும் செய்தி/ சூழல், உள்ளூர் மருந்து நிறுவனங்கள், "தீங்கான" மருந்துகளை தயாரித்து, சந்தைப்படுத்தி வருகின்றன.

தயாரிக்கப்படும் மருந்துகளின் பாதுகாப்பு மற்றும் திறன் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளாதும், தேசிய மருந்து ஒழுங்குமுறை அமைப்பிடம் அனுமதி பெறாமலும் செயல்பட்டு வருகின்றன.

நிலைமையை மேலும் மோசமாக்கும் அம்சம் இவ்வாறான மருந்துகள் உலக அளவில் அங்கீகாரம் பெறாதது; இந்தியாவில் தயாரிக்கப்படுகிறது; நோயாளிகளை இடரில் தள்ளுகிறது.

ஏப்ரல், 3 ந்தேதி, மத்திய மருந்துகள் தரநிர்ணய கட்டுப்பாட்டு நிறுவனம் , டாமன், இந்தூர், பெங்களூர் மற்றும் மும்பாய் போன்ற பகுதிகளில் நடத்திய சோதனைகளில் பெரிய அளவில் அறியப்படாத மருந்து உற்பத்தியாளர்கள்-- ஓலிவ் எல்த் கேர் நிறுவனத்தின் மீது வழக்கு தொடர தீர்மானித்துள்ளது.

அல்கெம், இன்டாஸ் பர்மா, கோயி பர்மாச்சுட்டிக்கல்ஸ், மேக்லியோட்ஸ் பர்மா, பர்மானோவா ஸ்பெசாலிட்டி மற்றும் அக்குமென்டிஸ் எல்த் கேர், ஆகிய நிறுவனங்கள், 'சந்தையிலிருந்து,' தமது மருந்துகளை  திருப்பி பெறவேண்டும் என்று உத்தரவு அளிக்கப்பட்டுள்ளது.

2015ம் ஆண்டிலிருந்தே அனுமதியின்றி கீழ்க்காணும் மருந்துகள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

*என்கிலோமைபின் கேப்சுயுல்(டெஸ்டோஸ்டெரொன் பற்றாக்குறை) உலகில் எந்நாட்டிலும் அங்கீகரிக்கப்படாதது.
*யுலிபிரிஸ்டல் அஸிடேட் கேப்சுயுல் (மகளிர் கர்ப்பப் பை கட்டி மருத்துவத்திற்கு )
*செட்டிலிஸ்டேட் கேப்சுயுல்(கொழுப்பு கரைக்கும்/உடல் பருமன் குறைக்கும் மருத்துவம்)
*டைனோஜெஸ்ட் கேப்சுயுல்( கருத்தடை மருந்து/ கர்ப்ப வலி குறைப்பு)
*மினொடுரோனிக் ஆசிட் சாப்ட் ஜெலட்டின்(எலும்பு முறிவு-ஒஸ்டியோபோரொசிஸ்)

மருந்துகள் மற்றும் ஒப்பனைப் பொருள் சட்டப் பிரிவுகளின், ஓட்டையை பெரிய மருந்து உற்பத்தி நிறுவனங்கள் நன்கு பயன்படுத்துகின்றன.மருந்து விற்பனையாளர்/சந்தைப்படுத்துபவருக்கு சிக்கல் இல்லை.தயாரிப்பாளருக்கே இச்சட்டத்தின் கீழ் பொறுப்பு சுமத்தப்படுகிறது.மாநில அரசுகள் மருந்து உற்பத்தி அனுமதி வழங்கிட அதிகாரம் இல்லை.மத்திய அரசின் மருந்துக் கட்டுப்பாட்டு அதிகார அமைப்பின் இசைவு பெற்றே தயாரிப்பில் ஈடுபடவேண்டும்.

சிக்கிம், டாமன், உத்தரகாண்ட் மற்றும் அசாம் மாநிலங்கள் மருந்து தயாரிப்பு உரிமங்களை, மத்திய அமைப்பின் ஒப்புதல் இன்றி வழங்கி வந்துள்ளது, தற்போது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.

No comments: