Tuesday, May 15, 2018

போன இடம் தெரியல........

ஆட்டுக் கல்லும்
அடியில் சென்றது.
குத்து உரலும், உலக்கையும்
மூலைக்குச் சென்றது.

அதிரசப் பலகையும்
தொங்கியபடி நின்றது,
தொலைந்து போனது.

எச்சில் படிகமும்
எட்டிச் சென்றது.
பெட்மன் படுக்கையும்/கட்டிலும்
பெயர்ந்து போனது.

கற்பூரப் பெட்டியும்
கரையான் புகுந்தது.

நாலுகை தாவாரமும்
கிணறும், துணி துவைக்கும்
கல்லும்,
தொட்டி கக்கூசும்,
நினைவை விட்டுச்
சென்றது.

வேப்ப மரமும்,
கற்பூரவல்லியும்,துளசியும்,
பட்டுரோசாவும்,
 பழங்கதையானது.

அண்டாவும் , குண்டாவும்,
அடுக்குச் சட்டியும்,
மூக்குச் சொம்பும்,

அன்னக் கொத்தியும்,
அடுக்களையும்,
உரியும், உலையும்,
சாலும், கரவம்
சாய்ந்து போனது.

வெட்டிவேர் விசிறியும்,
தாழம் பாயும்,
ஈச்சம் படுக்கையும்,
எட்டிச் சென்றது.

பச்சைக் கிளியும், ஊஞ்சலும்,
சாமி படங்களும்,
 பூசை சிலைகளும்
போன இடம் தெரியல.........

No comments: