Wednesday, May 9, 2018

பதில் யாது?

சிலை எடுப்பு அரசியல் சிறப்பு சேர்க்காது!
பொது நிலையில் செயற்பாடு உடையவர் இறப்பை, பகுத்தறிவில் சறுக்கி பதிவு செய்வது, மேலதிக சிறப்பியல்புகளை கூட்டுவது; மரணம் குறித்த பார்வையின் பழமைவாத, தொடர்ச்சியை மெருகேற்றுகிறது.

விமர்சனம் என்பதை விரோதமாக, குரோதமாக விளங்கிக் கொள்ளும் மனநிலை; நமக்கும் இறப்பு ஏற்பட்டால் இது போன்ற பாராட்டு/ நினைவேந்தல்/ சிலை எடுப்பு, நிகழ்வுகள் நடைபெறவேண்டும் என்கின்ற அவா அழுத்தம், விவாதத்தில் உள்ளுறையாக அமைகிறது.

குடும்பம் என்னும் அமைப்பின்/ நிறுவனத்தின் கொந்தளிப்பு /குலைவு, தனிமனித சீற்றம், ஆவேசம், நிலைமையை சமாளித்திட இயலாது, தன்முனைப்பு அணுகுமுறையில்;

 பெண்ணுரிமையை புறந்தள்ளி; குழந்தைகள் உரிமையைக் குலைத்து; தப்பித்துக் கொள்ளும்.தாக்குப் பிடிக்க இயலாத மனோநிலை, மனச்சிதைவு சமூக வினையாட்டாளர் வசமாகி, வாழ்வை வலிந்து முடித்துக் கொள்ளும் போது, இவ்வகை தன் பார்வை அவசியம்.

 நெருக்கடிகள் தாண்டி வாழ வேண்டிய தேவை சமூக விதியாகும் நேர்வில், சமூகப் பிரச்னைகளில் நடைபோடும், தடம் பதிக்கும் சமூகச் செயற்பாட்டாளர் எவ்வாறு உழைத்திட வேண்டும்/ முடியும் என்கின்ற பகிரங்க/ வெளிப்படையான விமர்சனத்திற்கு, நம்மிடம் உள்ள பதில் யாது?

No comments: