Saturday, May 12, 2018

'சோறு',

'சோறு', குறித்து அம்மாவின் உரையாடலில் உதிர்த்தவைகள். நினைவில் நின்றவை!

சட்டிச் சோறு
சாக்கடைச் சேறு

தண்டச் சோறு
உண்ட சோறு

திண்ண சோறு
மண்ணு சோறு

சோத்து மாடு
சோத்தால் அடித்த பிண்டம்
சோறு கண்ட இடம் சொர்க்கம்

இவையன்றி, பிள்ளைகளை திட்டும் வசை சொல்லாடல்கள் வரிசை,

 இதோ!

மாடு ஓட்டி வந்தேன், மணி ஆட்டி வந்தேன்
சோறு போடம்மா! சொக்கம்மா!

சோறு சாப்பிட்டா சொத்தை!
கூழு சாப்பிட்டா குண்டு!

வஞ்சனை நெஞ்சடைக்க, வரவு சோறு மாரடைக்க!

பானை சோத்துக்கு ஒரு சோறு பதம்,  என்கின்ற பக்குவம் கூறிடும் பதார்த்தமும் உண்டு.

84 அகவையில், பல வாழ்க்கை ஊடாட்டங்களில் தெறித்த, பழந்தமிழ்ச் சொல்லாடல்கள்/மரபு சொற்கள் மறைந்து கொண்டிருக்கிறது.புதிய தலைமுறை பேச்சு, வழக்கு, தாய் மொழியின் தடங்கள் இழந்து/தளங்கள் மறைந்து, மண்ணின் பெருமை அருகி வருகிறது!


No comments: