Saturday, June 2, 2018

காட்டிக் கொடுக்காதே

கொச்சைப் படுத்தாதே
கோமானே
எச்சில் உமிழாதே
தொப்புள் கொடி
அழிவு காண சகியாதே
சந்தர்ப்ப அரசியல்
சார்பு நிற்காதே
சாதனை இதுவென்று
சாத்த நினைக்காதே
சரித்திரம் சந்திக்கு வரும்
சமாதானம் செய்யாதே
களத்தில் நிற்பவர் கண்ணீர்
ஏற்காதே
காலன் நீ என்று தறுக்கி
திரியாதே
காலம் மாறும் தியாகம்
வெல்லும்
எட்டயப்பன் வரிசை
கூட்டாதே
எச்சில் காசு, அதிகாரம்
ஆட்டம் போடாதே
'எங்கெங்கு காணினும் சக்தியடா'
எட்டயபுரத்தை மறக்காதே
ஏதிலியாய், காட்டிக் கொடுக்காதே

1 comment:

சிகரம் பாரதி said...

அருமை. சிறப்பான வரிகள்.

இராஜராஜர் பராக்...!
பதிவர் : கவின்மொழிவர்மன்
#கவிதை #தமிழ் #கவின்மொழிவர்மன் #ராஜராஜசோழன் #லோகமாதேவி #Tamil #Thamizh #Poem #Kavidhai #KavinMozhiVarman #RajaRajaChozhan #Logamadhevi #SIGARAM #SIGARAMCO
#சிகரம்