Thursday, June 21, 2018

பேராசிரியர். தங்கப்பா நினைவேந்தல்


திறமையானவர்,
திருப்பம் நிறைந்தவர்.
உரிமையானவர்,
உலகம் உணர்ந்தவர்.
உப்பிலா இலக்கிய நிரலில்
ஒப்பிலா நெறிகள்,
படைத்தவர்.

உள்ளடக்கத்தில் ஓங்கி
உயர்ந்தவர்,
ஒருமை ஒதுக்கி
பன்மை தொடுத்தவர்,
பொது வாழ்வில்
பக்குவம் சேர்த்தவர்.

தலைமுறை இடைவெளி கடந்து
அன்பொடு அறிவும் இழைத்து
தமிழ் இயக்கம் தந்தவர்.

தன்னடக்க துறப்பாளர்,
மண்ணுடல் வழக்கொழித்து,
தன்னுடல் ஆய்வுக்களித்தவர்.

தமிழ்கூறும் நல்லுலக பேரொளி
பெருவெளி,
"எங்கப்பா"  எனும் தங்கப்பா

No comments: