Wednesday, October 24, 2018

கண்டாயா?





அங்கிருந்தது போலே
இங்கிருப்பாயா?

எங்கிருந்தபோதும்
ஏற்றம் தொலைப்பாயா?

வந்திருந்தவர் உபசரிப்பு
மறந்து போனாயா?

உள்ளிருந்தவர் உளறல்
ஊன்றி நின்றாயா?

கண் இருந்த போதும்
காட்சி மறந்தாயா?

காலம் கரைகின்ற நிரல்,

ஞாலம் உணர்ந்தாயா?
நால் வழி கண்டாயா?

No comments: