Thursday, October 25, 2018

'குழந்தைகள்'

மகிழ்ச்சியில், பெருமையில் பிஞ்சு இதயத்தை
ஒரு சொல் நிரப்பிடும்;
கொடுமையானது, இரக்கமற்றது,
அதை மறுத்திடும் போக்கு.

இருப்பினும் களைப்புறும் பொழுதுகள் எத்தனை என்பதறியுமா,
மகிழ்வுறும் பிஞ்சுகள்;
மூத்தோர் இழைத்திடும் துயரம், உரிமைத் தடை
எவ்வளவு அவர்களால் என்பதறியுமா!

நமது பிழைகளினால் எவ்வளவு துயரம் அடைகின்றனர்!
நமது தவறுகளினால் எவ்வளவு!
அடிக்கடி,கூடிடும், தவறான உற்சாகம்!
ஓர் குழந்தையின் துக்கம் இழைக்கிறது!

ஆட்சி செலுத்துகிறோம், அதிகம் கற்பிக்கிறோம்,
பறிக்கிறோம் அடைக்கிறோம்,
விரைவில் நெஞ்சத்தை விரைந்து பள்ளியில் ஒப்படைக்கிறோம்,
நமது குறுகிய வழியை கற்றிட.


இல்லை: அன்பினால் அன்பு செய்திட கற்பித்தோம்,
குழந்தை பருவத்தின் இயல் பணி;
பிரியம், பெருந்தன்மை மற்றும் நம்பிக்கை,
யாவும் சில காலம் வேண்டும்.

('குழந்தைகள்', எனும் தலைப்பில் லெட்டியா எலிசபத் லென்டன் இயற்றிய கவிதை மொழியாக்க வாய்ப்பு பிரான்சு நாட்டின் சுற்றுச் செலவில் எமக்கு கிட்டியது)

No comments: