Sunday, November 11, 2018

மே 25


ஒளிரும் அழகிய நாள் அது,
அதன் குளிர்ச்சியும் மென் தென்றலும்.
தெருவெங்கும் வண்ணகோலங்கள் மின்னும்.
ஞாயிறு காலை என்றொருவர் கூறிவிடலாம்.

அனைவர் முகங்களிலும் மகிழ்ச்சி ஒளியாக,
இறை வழிபாடு உற்சாகம் அளித்திடும்.
விரைவில்,விரைவில், அனைத்தும் அமைதியாக.
துப்பாக்கிகள் ஓசை காற்றில் கலந்தது.

ஒவ்வொரு ஆன்மாவும்  அடைக்கலம் சென்றது.
வண்ணங்கள் புலப்படா தடுமாற்றம்.
சண்டையிடும் பையன்கள் அணிவகுப்பில்.
இருப்பினும் இது, முதல் இராணுவப் புரட்சி.

வாழ்க்கையே சலனமற்று அமைதியாக.
வீரர்களின் குரல் செவிகளை துலைத்தது,
அதிகாரிகள் குன்றுகளை நோக்கி ஓட்டம்,
ஆட்சிக் குலைவுக்கு இட்டுச் செல்ல.

நாம் யாவரும் தடகள வீரர்கள்,
வாழ்க்கையைக் காத்திட ஓட்டம்,
இரக்கமற்ற கொள்ளையர் பிடிகளில்,
கெட்ட நினைவாக அது.

செவிகளில் ரீங்காரம் எழுப்பிக் கொண்டிருக்கிறது,
கடப்பது சிரமம் ஆயினும்.
அதன் கொடூரம் வலி,
வேண்டாம் இவை யாவும் யாம் வேண்டுகிறோம்.

*சியேரா லியோன் நாட்டில், சனநாயக ஆட்சி 1996ல் மீட்டெடுக்கப்பட பிறகு, நிகழ்ந்த இராணுவப் புரட்சி ஒட்டி, நிகழ்ந்த நடவடிக்கைகள் பற்றி, கவிஞர். மாடா ஜோ ஜாய் ஸ்கொயர், எதிரொலிப்புகள்.

*எமது மொழியாக்கத்தில்.

No comments: