Thursday, November 8, 2018

42 வயதினிலே



காலங்கள் கரைந்தன விரைவாக
விடுதலைக் குளத்தில் எம் அகவை நாற்பத்திரெண்டு
உடானாளிகளுக்கு காண்பிக்க என்ன இயலும், எம்மால்?
வலியாகினும், உறுதியான, வளமான பெற்றோரில் ஒருவனாக குரல் எழுப்புவேன்
பசி வாட்டிட, ஆசை அலைக் கழிக்க, ஏழ்மை முகத்திரையில்
எம் குழந்தைகள்
தற்கணம்! அகன்று விட்டனர் அனைவரும் எங்கோ.

தொலை வெளியில் வாழ்க்கை தொங்கலாட
நன் மருத்துவராக சிலர்,  நொடிதொறும் நோய் நொடியில்
தொலைந்து கொண்டிருக்கின்றனர், நோயுற்றோர் இங்கே
நல்லாசிரியனாக அங்கே, பலமிழந்த பள்ளிகள் இங்கே,
தொலை தேசங்களில் அடுக்களை சுத்தம், கார் கழுவி உழைப்பை விற்று ஊழியம்,
எமது நிலங்கள் தரிசாக கேட்பாரற்று,
மீண்டும் தொடர்வேன் கட்டாயம், சார்பு வாழ்க்கை தெரிவு செய்வேன்.

(சைரா லியோன் நாட்டின்," மாடா ஜோ சாய் ஸ்கொய்ர்", போட்ஸ்வனா நாட்டு பல்கலைக் கழக, இலக்கியக் கல்வித் துறை மாணவர்)

(எமது மொழியாக்க முயற்சியில், மற்றுமொரு படி)

2 comments:

Anonymous said...

சிறப்பு.தொடருங்கள்!பிறகு நூலாக்கம் செய்யலாம்!

Anonymous said...

வாழ்த்துகள்