காகம் கரைவது போல் காலம் கடக்கிறது. அமைதி தேடி அலைக் கழிந்த மனம், அல்லல் ஏற்றது தினம், அயலகச் செலவில் அமைவுற்றது குணம்.கூட்டுப் பறவைக்கு, தனிமை துயரம் ஆயினும், மாறிய சூழல் உயரம், தோழமை கூட்டியது. தோகை விரி மயிலாக மகிழ்வூட்டியது!
வேலையில்லா வேளை விடிந்திடும் காலை, விரைவுறும் பயண சாலை, விடை தேடும் வினாப் போல் விரிந்திடும், விளங்கிடும் விளக்கொளி குறிப்பில்.
இன்னியங்கிகள் வரிசையாக அணி வகுத்திடும், அரவம் குறைத்து. ஆள் கடக்கும் குறிப்பில், நின்று நிதானித்து தொடர்ந்திடும். கனிவுடன், 'மன்னிக்கவும்' என திடீரென நடைபாதை வளைவில் எதிர்ப்பட்ட பெண்மணியின் வாயில் உதிர்த்த முத்து, வணிக வளாகங்களிலும்.
எங்கெங்கு எதிர்ப்படும் நேர்விலும், கனிவான சொற்கள். மொழிக்கும், நாட்டுக்கும், மனிதத்திற்கும் அணி சேர்க்கும் ஒழுகலாறுகள். ஒழுங்கியக்க கண்ணியமான போக்குகள்.
நடைபாதையினர் உரிமை;மிதி வண்டியின் உரிமை; மதிக்கப்படுகிறது மகிழ்வுடன், தளர்வின்றி.
No comments:
Post a Comment