நாட்டை விரும்பு, விசுவாசமுடன் இரு;
சக நாட்டினர் மெச்ச, விருப்பத்தை வெல்,
ஆக்க விமர்சனத்தை மதிக்க கற்க.
தவறாக வழிநடத்தக் கூடும் வசீகரிப்புகள் தடுத்திடு.
உமக்குரியதை ஏற்றுக்கொள்,
பிறரிடம் காண் நற்பண்புகளை.
உமது நாட்டில் தாக்கத்தை ஏற்படுத்து,
நல் மாற்றம் கொண்டு வா.
பலவிதங்களில் உம்மால் இயலும்.
விசுவாசமிக்க போர்வீரனாக,
சுயநலமற்ற அரசியல்வாதியாக
சமூக தரத்தின் மேம்பாட்டில்.
புவியில் நீ உதித்ததின் நோக்கம் அறிந்து,
நாட்டுப் பற்றே ஒரே வழி
உம் நற்பணிகளால் நின்றிலங்கிடும் என்றென்றும்.
நாட்டுப்பற்று! நாட்டுப்பற்று! நாட்டுப்பற்று!
கவிஞர். மாடா ஜோ ஜாய் ஸ்கொயர்
*எமது மொழியாக்கத்தில்.
No comments:
Post a Comment