Tuesday, November 13, 2018

சுவர்க்கத்தின் இருள்

 கவிஞர்.மாட ஜோ சாய் ஸ்கொய்ர்

தனித்து, வெறிச்சோடிய தெருக்களில்,
நான் நடந்தேன்.
குளம் போல் தேங்கிய,
இரத்தத்தின் ஊடாக,
விரிந்த  வளமான, விளைச்சல் மிக்க நிலத்தில்.
கிளர்ச்சியாளர் பெற்ற சமாதானம்
இதுவா ?


எமது தாய், தமக்கைகள்
 நம்பிக்கை இழந்து
அவர்கள் விருப்பத்திற்கு எதிராக,
அறியாமையை சீர்குலைத்து, அத்துமீறி,
கற்பழிப்பவராக, கொள்ளையராக,
குருதி வெறி, குற்ற மூர்க்கராக
அமைதியான நிலத்தில் தடம் பதித்தனர்.

காற்று இனிமை இழந்து
வலியுடன், வலிமை இழந்து.
சொந்த நாட்டிலேயே பிணைக் கைதிகளாக,
முட்கள் அடர்ந்திட,
 மந்தமான எதிர்காலத்துடன்.


இது ஒரு அச்சமான தருணம் அன்றி
 வேறல்ல.
வல்லூறுகள் கொண்டாடும் தினமாக.
 மெச்சத்தக்க நினைவு உடல்கள்,
 குப்பை கூளமாக,
எமது இதயங்கள், ஆன்மா இரத்தம் சொரிய.

ஓ! சிதலமடைந்த,
பிளவுபட்ட, தாய் நாடே! 
உமது ஆறுதலுக்காக, 
அமைதியை தக்க வைத்திடு.
உமது பெண்கள், பிள்ளைகளின்
விருப்ப ஆசை து:
உம்மிடம் வேண்டுகிறோம்,
இனிமையான தாயே,
எம்மீது இரக்கம் காட்டு!

(எமது மொழியாக்க முயற்சியில்)

No comments: