Friday, November 23, 2018

நெகிழ் பிணை



கவிஞர்.நவோமி சிகாப் நை

என் உடன் பிறப்பு தனது சிறிய வெண் படுக்கையில்,
உறவு இழையின் ஒரு முனையில்.
இன்னும் விழித்திருந்தேன் சமிக்ஞையில் நான்,
பிணைந்திட மறு முனையில்.
நாங்கள் பேசியிருக்கலாம்,
ஒருவருக்கொருவர் பாடியிருக்கலாம்,
ஒரே அறையில் ஐந்தாண்டுகள் நாங்கள்,
நாள் முழுவதும் நாங்கள் சண்டைபிடித்து இருந்தாலும்,
தேய்ந்த சிறு முனையுடை மெல்லிணை
ஆறுதல் அளித்து, எம்மை இணைத்தது இருளில்.

முதலில், ஆழ்ந்து உறங்கியபோதில்
இழை முனை தரையில் வீழ்ந்து துக்ககரமாக,
அவனைக் காணவில்லை,
எனினும்
அவனின் சீரான மூச்சை கேட்க இயலும்,
முன் நின்றது
பிரிந்து தொடர்
எம் வாழ்க்கைப் பயணம்.

(மொழியாக்கத்தில்)



No comments: